பக்கம்:ஆண்மை.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கடிதம்

சிங்காரவேலு ஒரு இலக்கிய கர்த்தா. வாழ்க்கையின் சிக்கல்களை, வாழ்க்கையின் இலக்ஷியங்களை, ஏன் வாழ்க்கையையே திறந்து காண்பிக்கும் ஜன்னல்கள்தாம் சிறுகதைகள் என்றால், அவைகளுக்கு உதாரணம் சிங்காரவேலுவின் கதைகள்.

ஒரு நாளும் பேனாவை வைத்துக் கொண்டு, கோனாகி விடுவோம் என்று அவர் கனவு காணவில்லை; ஆனால், பேனாவை வைத்துக் கொண்டு, பிச்சை எடுக்க வேண்டும் என்று நினைக்கவும் இல்லை.

அவருடைய சிறுகதைகளைப் பொறுத்த வரை, சமூகம் நூற்றில் இன்னொருவராக மதித்தது. முக்கால்வாசிப் பேருக்கு அழகு என்பது என்ன என்று தெரியாது. சிலருக்கு அழகாய் இருக்கிறது என்று முதலில் சொல்லுவதற்குத் தைரியமில்லை.

இந்த மாதிரியான சமூகத்தினிடை சிங்காரவேலு உயிர் வாழ வேண்டுமென்றால், வாழ்க்கையை உண்ணாவிரதத்தில் கழிக்கச் சக்தி படைத்திருக்க வேண்டும். அல்லது ஏதாவது கருணை மிகுந்த தெய்வம், அட்சய பாத்திரம் ஒன்றைக் கொடுத்து விட்டுப் போயிருக்க வேண்டும். இயற்கையின் சட்டத்தை மீறவும், தெய்வத்தின் கருணையைப் பெறவும் முடியாத இந்தக் கலி காலத்தில் பிறந்ததைப் பற்றி, சிங்காரவேலு நொந்து கொள்வதில் பயனில்லை.

அவருடைய சமூகமாகவும், ரஸிகர்களாகவும் சில நண்பர்கள் இருந்தார்கள். அதனால், அவருக்குப் பசி என்ற கவலை ஏறக்குறைய இல்லை. ஏனென்றால், அவருடைய தேவைகள் வெகு கொஞ்சம். குடும்ப பாரம் கிடையாது. கனவு கண்டு கொண்டிருப்பதற்குப் போதிய அவகாசம் இருந்தாலும், அதை இலக்கியமாக வடிவெடுக்க வைக்கும் ஊக்கம் குறைந்து வர ஆரம்பித்தது.

புகழ் இல்லாமல், இலக்கிய கர்த்தா உயிர் வாழ முடியாது. முகஸ்துதி வேண்டாம். இல்லாததை நீங்கள் சொல்லி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்மை.pdf/23&oldid=1694236" இலிருந்து மீள்விக்கப்பட்டது