பக்கம்:ஆதி திராவிடர் பூர்வ சரித்திரம்.djvu/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

11

பேரில் ஆச்சரியமான நடவடிக்கை நடத்திய குறளை எழுதி னர். ஸ்ரீராமானுஜ சுவாமிகள் இக்குலத்தாரை, திருகுலத் தார் என்றார்.

தற்காலத்திலேயே இப்பறையர்களுக்கு இவ்வித சிறப் புக ளிருக்குமாயின் பூர்வீகத்தில் எவ்வளவு சிறப்புற்றவர்க ளா யிருக்கவேண்டுமென்று சொல்லவேண்டியதில்லை. இவர் கள் ஓர்காலத்தில் தென்னிந்தியாவில் அரசவமிசத்தை சேர்ந் தவாகளா யிருநதார்கள்எனபதற்கு சந்தேகமில்லை. கர் னல் ஆல்காட்டுதுரை சொல்லுகிறபடி " ராஜியங்களும் மதங் களும் மாரினபோது, பறையா அரசர்கள் தங்கள் தேசத் தையும் , பறையா கனவான்கள் தங்கள் செல்வத்தையும், பறையரில் தாழ்வானவர்கள் தங்கள் எல்லாவற்றையு மிழந் தார்கள். ரெவிளனட் கௌடி என்பவா, பறையர்களும் பூமியும் என்கிற வியாரத்தில் அடியில் வருமாறு வரைந்து ளார் ' அழிந்த பிரபுக்கள் பேரில் அன்பு பாராட்டப்பட்ட ஜனங்களிருக்கிறாகள் ; அன்னவருக்கு நான சொல்லுவதா வது, இந்த தேரததில அப்பேர்ப்பட்ட பிரபுக்கள் வகுப்பிற் சேர்ந்தவரில் பறையர்கள் பூர்வீகமானவாகள் என்றும் அந்த காரணத்தால் தயாளமுளளவாகளா யிருக்கவேண்டு மென்றும் சொல்லுகிறேன்.


4. அத்தியாயம்.

பறையர் எப்படி தாழ்த்தப்பட்டார்கள்.


மேல்கண்டபடி எல்லாம் சிறப்புற்றிருந்த 'பறையர்" என்போர் யாரால் எப்படி தாழ்த்தப்பட்டார்கள் என்பதை சற்று விசாரிப்போம். இப்படி பறையரைத் தாழ்த்தியவர்" ஆரிய பிராமணர். இவ்வாரியர் சுமார் முவ்வாயிறம் வருஷங்க