பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 ஆனந்த முதல் ஆனந்த வரை இவர்களைப் பற்றி ஏதோ எழுதி இருப்பார் என நினைக் கிறேன். அதை மறுக்கும் முகத்தான் பல மறுப்புகளும், மறுப்புக்கு மறுப்புகளும் வெளிவந்தன. அவற்றுள் ஒன்று 'வைர ஆப்பு என்ற தலைப்பில் வெளிவந்தது. எதிரி கிளப்பிய ஏதோ ஒரு வினாவிற்குத் தக்க பதில் தந்து அவர் வாயடைத்து, ஒன்றும் எழுதாது நிற்கும் நிலையில் அந்த எழுத்தை அமைத்து அதற்கு இப்பெயர்)இட்டார்கள் என நினைக்கிறேன். அதற்கும் அவர்கள் மறுப்பு எழுதினார் களோ இல்லையோ என்பது எனக்கு நினைவில் இல்லை. சுமார் இருபதுக்கும் மேற்பட்ட துண்டுப் பிரசுரங்களை ஆயிரக்கணக்கில் அச்சிட்டு ஊர், தோறும் சென்று சென்று கொடுத்துக் கொடுத்து உபதேசம் செய்த போதிலும் இறுதி யாக அப்பா தோல்வியுற்றார்கள்; எதிரி வெற்றி பெற்றார். அப்பா தோல்வியுற்றது சாதாரணம்தான். அத்தோல்வி யைத் தோல்வி எனக் கருதாது சிரித்த முகத்தோடு அதை ஏற்று அன்று முதல் அத்துறைப்பக்கம் நோக்கா நிலையில் உள்ள அவர் உள்ளதைத்தான் நான் அடிக்கடி நினைக் கிறேன். ஒருவேளை அவர்கள் அத்தேர்தலில் வெற்றி பெற்றிருப்பபார்களாயின், தொடர்ந்து அந்தத் துறை யிலேயே அவர்கள் மனம் சென்று பள்ளியைக் கவனியாது விட்டிருக்கலாம். பதவியில் அவர்கள்.மேன்மேல் உயர்ந்திருக் கலாம். ஆனால் இந்துமதப்பள்ளி தழைத்து வளர்ச்சியுற்றுச் சிறந்திருக்காதே. இதை நினைக்கும்யோது அப்பாவிற்கு அந்தத் தோல்வி,தோல்வியே அல்ல; வெற்றிதான் என்று அடிக்கடி நான் சொல்வதுண்டு. - தேர்தல் காலத்தில் அத்தகைய துண்டுப் பிரசுரங்களை யெல்லாம் எழுதியவர் தலைமை ஆசிரியர்தான். அவர் தம் எழுத்தில் விறுவிறுப்பு இருந்ததோ என்னவோ, அப்பா அவர்கள் அவற்றைப் படித்துப் படித்து மகிழ்வார்கன். நான் அவர்கள் வீட்டிலேயே தங்கி இருந்தமையின் அவற்றின் வேலைகளில் நானும் ஈடுபடுவேன். தலைமை ஆசிரியர்