பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 ஆனந்த முதல் ஆனந்த வரை தேவராகத் தலைமை வகித்தேன். அது மட்டும் நன்கு நினைவிருக்கிறது. என் ஊர்ப் பள்ளியில் கிருட்டினனாக நடித்த பிறகு இந்துமதப் பள்ளியில் அடிக்கடி நடை பெறும் சிறு நாடகங்களில் நான் பங்கு பெறுவது உண்டு. ஆகவே எனக்கு இதிலும் ஒரு முக்கிய பாகமே கொடுத்திருந் தார்கள். - அன்று நாடகம் இல்லை யாதலால் எங்களில் ஒரு சிலர் இரண்டொரு ஆசிரியர்களுடன் சென்னை நகரைச் சுற்றிப் பார்க்கப் போனோம். என்னென்ன பார்த்தோம் என்பது கூட நினைவில் இல்லை. இரவு தங்கிய இடத்துக்கு வந்து விட்டோம். அப்பா மட்டும் எங்கெங்கோ அலைந்தார். மாநாடு நடத்தியவர்களுள் யாரோ அவருக்கு நாடகம் நடத்த இடம் தருவதாக வாக்களித்தார்கள் போலும். கடைசியில் அப்பா, அவர்களைப் பார்த்தாரோ இல்லையோ எனக்குத் தெரியாது; அந்தப் பந்தலில் மட்டும் நாடகம் நடக்கவில்லை. என்றாலும் சென்னைக்கு வந்து நாடகம் நடக்காமல் திரும்புவதா என அப்பா அவர்கள் திட்டமிட் டார்கள். எப்படியாவது சென்னையில் நாடகத்தை நடத்தத்தான் வேண்டும் என்ற முடிவிலே எங்கெங்கோ சென்றார்கள். இரவு ஒன்பது மணிக்கு மேல் திரும்பி வந்தார்கள். மறு நாளே வேறு எங்கேயோ நாடகம் நடத்த ஏற்பாடு செய்துவிட்டு வந்ததாக மகிழ்ச்சியோடு கூறினார் . கள். ஆம்! அப்பா அவர்களுக்கும் அன்றும் சரி இன்றும் சரி, ஒரே ஆசைதான் முக்கியமானது. தமது பள்ளிப் பிள்ளை களை நன்கு பயிற்றி மற்றவர் முன்னிலையில் பேச்சு, நடப்பு, உடற்பயிற்சி ஆகியவற்றில் அவர்கள் பெற்ற திறனைக் காட்டி, அவர்கள் மகிழத் தாம் மகிழ வேண்டும் என்ற ஆசையே அது. ஆகவே இப்படி ஒரு முப்பது பேர் சென்னைக்கு வந்து வீணாகத் திரும்புவதை அவர்கள் விரும்ப வில்லை. எப்படியோ முயன்று யார் யாரையோ பிடித்து ஒரு நாடகத்துக்கு ஏற்பாடு செய்துவிட்டார்கள்.