பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளமையின் கினைவுகள் 137 பெற்றதாலும், 5-೧/ir அடியவர் பொருட்டு எதிர்பாராத வேளைகளில் தாமே வந்து ஆட்கொள்ளும் புராணக் கதை களைக் கேட்டிருந்ததாலும் அவ்வாறு நான் நினைக்க ஏது வாயிற்று. என் உடன் இருந்த நண்பரும் அவ்வாறே எண்ணி இருக்கக்கூடும் என்பதை அவர் முகத்தோற்றமும் செயலும் நன்கு விளக்கின. நாங்கள் செயலற்று நின்று விட்டோம் என்று சொல்லிவிடலாம். வெறும் கையிலிருந்து விபூதி வந்தது எங்களுக்குப் பெரிய ஆச்சரியமாக இருந்தது. அவரிடம் ஒருவித பயமும் பக்தியும் உண்டாயிற்று. காலில்கூட விழுந்து கும்பிடத் தீர்மானித்துவிட்டோம். என்றாலும் நடுத்தெருவில் அவ் வாறு செய்ய முடியவில்லை. அவர் அந்தக் திருநீற்றை எங்களிடம் கொடுத்தார். நாங்கள் வாங்கி நெற்றியில் அணிந்துகொண்டோம். தலைநிமிர்ந்தோம். மறுகையைக் காட்டி மூடினார். பிறகு திறந்தார்; அதில் குங்குமம் இருந்தது. எங்கள் பயம் அதிகரித்தது. உண்மையிலேயே அவர் கடவுள் அவதாரம் என்றே முடிவுக்கு வந்துவிட்டோம். என்றாலும் அடுத்து அவர் கேட்டது எங்கள் உள்ளத்தில் ஒரு மாற்றத்தை உண்டாக்கிவிட்டது என்னலாம். அவர் குங்குமத்தைக் கொடுத்தார். அதையும் வாங்கி இட்டுக் கொண்டோம். பிள்ளைகளே நீங்கள் என்ன நினைக் கிறீர்கள்?’ என்று கேட்டார் அவர், நாங்கள் நினைப்பது என்ன! அவரைத் தானே வந்து நம்மை ஆட்கொள்ளும் கடவுளாக அல்லவா நாங்கள் நினைத்தோம். நினைத்ததை அப்படியே அவரிடமும் சொல்லிவிட்டோம். ஆம்! என் நண்பனும் என்னைப் போலவே எண்ணி னான். அவர் அதுதான் சமயமென்று தன் மூட்டையை அவிழ்க்கத் தொடங்கினார். துணி மூட்டையை அல்ல; சொரூப மூட்டையை. ஆம் குழந்தைகளே! உங்கள் துன்பத்தை அறிந்து ஆண்டவனே என்னை இங்கு அனுப்பி