பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளமையின் நினைவுகள் - 139 தால் ஏதாவது கொடுக்கவேண்டும் என்று நினைத்தேன். பையில் கையை விட்டேன். ஒரு நான்கணா இருந்தது. என் பாட்டியார் அதிகமாக என்னிடம் பணம் தரமாட்டார்கள். அவர்களுக்குக் குடும்பச்செலவுகளுக்காக அம்மா திட்டமாகவே திங்கள் தோறும் கொடுத்தனுப்பி வந்தார்கள். எனவே ஒரு காலணா கூட நாங்கள் அதிகமாகச் செலவு செய்ய முடியாது. அந்த நாலணாக்கூட ஏதோ கூட்டத்திற்குச் செல்லுவதால் பாட்டி கொடுத்தார்கள். பள்ளிக்கூடம் வகுப்புக்குப் போவதா யிருப்பின் நாங்கள் ஒன்றும் கொண்டு செல்வதில்லை. என் நண்பரும் எட்டனா வைத்திருந்தார். இரண்டையும் சேர்த்து அந்தச் சாமியாரிடம் கொடுத்து பாவம், வெகு தொலைவில் இருந்து வந்திருக்கிறீர்கள். இதைக்கொண்டு ஏதாவது உண்டு செல்லுங்கள்’ என்று சொன்னேன். அவர் சிரித்தார். ஒருவேளை அதைக் குறைவாகக் கருதினாரோ அன்றி ஒன்றும் வேண்டாம் என்று நினைத்தாரோ என நாங்கள் கருதிக் கொண்டிருக்கும் அதே வேளையில் தம்பிகளே! யானைப் பசிக்கு இது எம்மாத்திரம்' என்றார். அப்போதுதான் அவர் அதிகப் பணம் வேண்டுகிறார் என்பது புலப்பட்டது. நாங்கள் என்ன செய்யமுடியும்? படிக்கும் எங்களிடம் பணம் ஏது? உள்ளதை நாங்கள் சொல்லிவிட்டோம். அவர் விடுவதாக இல்லை. நீங்கள் வீட்டில் போய்த் தேடிப் பாருங்கள். ஏதாவது கிடைக்கும் என்று சோசியம் சொல்லுவதுபோல் சொன்னார். எனக்குத் தெரியும் வீட்டில் ஒன்றும் இல்லை என்பது. என்றாலும் என் நண்பன் வீட்டில் ஒரு ரூபாய் வைத்திருந்தானாம். அதைத் தான் சாமியார் கண்டு சொன்னார் என்று அவன் கருதினான், ஆம்! வீட்டில் ஒரு ரூபாய் வைத்திருக்கிறேன். அதைக் கொண்டுவருகிறேன்" என்றான் அவன். நாங்கள் இருவரும் உடனே விரைந்து வீட்டுக்குத் திரும்பினோம், -