பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 - ஆனந்த முதல் ஆனந்த வரை கதராடையே அன்று நான் உடுத்துவது. பின் என் மண நாளிலே கூட அத்தகைய கதர் ஆடைகளையே மணப் பரிசாகப் பெற்றேன். நான் அன்றுதொட்டுக் காங்கிரசில் உறுப்பினனாகவும் இருந்தேன். எனினும் சில ஆண்டுகள் கழித்து - 1938இல் என்று நினைக்கிறேன் - செங்கற்பட்டு மாவட்டக் கழகத்தேர்தலில் நான் நெடுநாளைய காங்கிரஸ் காரன் என்ற காரணத்தால் தள்ளப்பட்டு, அன்று புதிதாகக் காங்கிரஸில் சேர்ந்த ஒருவரைக் காங்கிரஸ் அபேட்சகராக அவர்கள் தேர்ந்தெடுத்த அந்த நாள் வரை நான் காங்கிரஸ் காரனாகத்தான் இருந்தேன். பிறகு என் வாழ்வு நெறி அறிவுத் துறையில் சென்று விட்டது. அத்தேர்தலில் நானே வெற்றி பெற்றேன் என்பதையும் குறிப்பிடுகிறேன். ஊழியர் சங்கம் நன்கு பணியாற்றிற்று. பக்கத்திலே உள்ள சேரிகளுக்கெல்லாம் சென்று அங்கு மக்கள் உயர வேண்டிய வகை பற்றியும், தூய்மையாக இருக்க வேண்டிய நிலை பற்றியும் பேசிச் சீர்திருத்தம் செய்து வந்தோம். அன்று கள்ளைக் குடிக்க வேண்டாம் என்று பிரசாரம் செய்ய அரசாங்கம் அனுமதித்து இருந்தது. எனவே நாங்கள் இரண்டிரண்டு மாணவர்களாகப் பல ஊர்களுக்குச் சென்று மதுவிலக்குப் பிரசாரம் செய்தோம். விடுமுறை நாட்களில் தான் இவற்றைச் செய்தோம் என்றாலும் எங்கள் முறையான படிப்பு இவற்றால் சிறிது தடைப்பட்டது என்று. சொல்லலாம். ஒரு நாள் ஒரு கூட்டத்திற்குப் போவதற்காக நான் என் கணக்கு ஆசிரியரிடம் உத்தரவு வாங்கிக் கொண்டு வந்தேன். அன்று முக்கியமான பாடம் நடை பெற்றது. பிறகு சில நாட்கள் கழித்தே அந்தப் பாடத்தை நான் புரிந்து கொள்ள முடிந்தது. இவ்வாறு சில பாடங்கள் எனக்குப் புரியா வகையில் சென்றன. எனினும் பள்ளி யிறுதி வகுப்பில் கடைசி ஆறு திங்களில் நான் ஒன்றிலும் பங்கு கொள்ளாது அமைதியாக இருந்து இறுதியில் வெற்றி