பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 ஆனந்த முதல் ஆனந்த வரை பார். ஆயினும் ஏனோ-இளமையில் அறியா நிலையில் தானோ-நான் அவர் வீட்டிற்கு அடிக்கடி சென்றேன். அவர் அந்தப் பெண்ணைப்பற்றி அடிக்கடி என்னிடம் பேசுவார். இரண்டொருமுறை என்னை அங்கேயே அழைத்துச் செல்வார்-இரண்டொருமுறை அவர் வீட்டிற்கே பெண்ணை அழைத்துவருவார். எப்படியோ எங்கள் வீட்டில் யாருக்கும் விருப்பமில்லாத நிலையிலும்-அந்தப் பெண் உள்ளம் வேறிடம் சென்றிருந்த போதிலும்-அவள் பெற்றோரும் எதிர் வீட்டுக்காரரும் எங்கள் இருவருக்கும் முடிச்சுப்போடத் திட்ட மிட்டு வெற்றியும் பெற்றுவிட்டனர். என் பெரியப்பாவும் பெரிய அன்னையும் எப்போதும் போல அது உங்கள் விஷயம் என்று சொல்லிவிட்டனர். அன்னையார் செய்வ தறியாது திகைத்தனர். அவள் தந்தையார் அடிக்கடி அம்மா விடம்வந்து ஏதேதோ பேசிய காரணத்தால் இறுதியில் என் பாட்டி இறந்த மறுதிங்களிலேயே எனது மணம் நிறை வேறிற்று. ஆயினும் மணம் முடிந்த உடனேயே அவர்கள் உள்ளம் பொருள்மேல் நாட்டமுற்றிருப்பதைக் காட்டி விட்டது. அதன் விளைவாக மணம்பெயருக்கு அமைந்ததே யன்றி, வாழ்வுக்கு என அமையவில்லை. இன்றும் அதே கொடுமை நீடிப்பதை நினைக்க நெஞ்சம் நடுங்குகின்றது. ஆயினும் ஒன்றும் செய்யமுடியாத நிலையில் காலம் கடந்து கொண்டே செல்லுகின்றது. மணம் செய்து கொண்டாலும், நான் மணம்புரிந்து கொள்ளாத ஒருவர் வாழ்வினையே வாழ வேண்டி வந்தது. அந்த இளமை உள்ளித்தில் அவ்வளவாக அது உறுத்தவில்லையாயினும் காலம் செல்லச்செல்ல அந்த வாழ்வின் கொடுமை நன்கு புலனாயிற்று. ஊரில் பலர் மணம் செய்தும் சந்நியாசி' என்று என்னைக் கேலிசெய்யவும் தொடங்கிவிட்டனர். ஆம்! அதே வேளையில் என்னைக் காப்பாற்ற ஒரு சந்நியாசிதான் எங்கள் ஊருக்கு வந்து சேர்ந்தார். என்னை மேலே படிக்க வேண்டாம் என ஆணையிட்ட அன்னையார் அதில் உறுதியாக இருந்தமையால் என்னால்