பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 உணரமுடிகின்றது. ஒவ்வொரு சாதாரண மனிதனும்கல்லாதவனும்கூட-அவனுடைய கடந்தகால நிகழ்ச்சிகளை எண்ணிச் செயலாற்றுவனாயின் நிச்சயமாக அச் செயல்கள் தெளிவு பெற்றவனாகச் செய்யும் என்பது உண்மையாகும். எனவே மற்றவர்களுக்குப் பயன்படுகிறதோ இல்லையோ, இந்நூல் என்னைப் பொறுத்தவரையில் என் உளத்துக்குத் தெளிவூட்டி, உணர்வை நல்லவழியில் திருத்தி, உலகில் உலவ வழிகாட்டியாக அமையும் என எண்ணுகிறேன். என் நூல்களின் விற்பனை வருவாய் அனைத்தும் வள்ளியம்மாள் கல்வி அறத்துக்கே என உரிமைப்படுத்தி நின்ற நெறியில் இந்நூலும் வள்ளியம்மாள் கல்வி அறத்'துக்கெனவே வெளிவருகிறது. தமிழ் உலகம் இந்நூலை நலமிருப்பின் ஏற்றுப் புரக்க வேண்டுகிறேன். இந்நூல் வெளிவரக் காரணமா யிருந்த அனைவருக்கும் நன்றியுடையேன். சென்னை-30 அ. மு. பரமசிவானந்தம் "தமிழ்க்கலை இல்லம்' | பணிவுள்ள, 1-9-'80