பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/188

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காஞ்சி வாழ்க்கை 187 கூறி என்னை வீரன்’ என்று அழைத்தமைக்குக் காரணம் காட்டினார். இவன் அன்று செய்த செயல் சரிதான்; எனினும் ஆசிரியரை விடக்கூடாது என்ற காரணத்தால் இவனைக் கடிந்துகொண்டேன். வகுப்பிற்கு வாராது தேர்வு எழுதி முதல்வனாக வெற்றிபெற்றான். (அவர் சொல்லித் தான் நான் முதலிடம் பெற்ற தறிந்தேன்.) எனினும் எனக்குள் ஒர் அச்சம் இருந்தது. இவனை-இவனொடு பழகியதிலிருந்து-ஒரு வீரனாக நினைத்தேன். எங்கே திரும்பி வந்து மேல் வகுப்பில் சேர்ந்து கோழையாகிவிடுவானோ என அஞ்சினேன். ஆயினும் இவன் என்மதிப்பில் உயர்ந்தே விட் டான். என் எண்ணத்தை நிறைவேற்றி வீரனாகிவிட்டான். இனி அவன் படித்தாலும் படிக்காவிட்டாலும் கவலை இல்லை-கொள்கையின் வீரன் என்பதைக் காட்டிவிட்டான்' என்று விளக்கினார். அடிகளார் புன்சிரிப்பு என்னை ஆட் கொண்டது. நானும் என் அச்சம் நீங்கி அருகில் சென்று பின்பக்கமாக இருவர் இடையிலும் நின்றேன். இருவரும் என் முதுகைத் தைவந்து நீடு வாழ்க’ என வாழ்த்தினர். அந்த வாழ்த்தின் வலத்தாலேயே இன்றும் ஒரளவு அமைதி பெற்ற உள்ளத்தோடு அன்னைத் தமிழுக்குப் பணிசெய்து கொண்டு வாழ்கின்றேன். அத்தகைய பெரியவர்களின் தெளிவும் அறிவும் திண்மையும் செறிவும் சான்றாண்மையும் தளரா உறுதியும் எனக்கு உற்றுழி உதவி, நான் என் வாழ்நாளைக் கழிக்க உதவியாகின்றன. - இவ்வாறு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நான் வெறும் ஏட்டுப் படிப்பினைப் பயின்றேன் என்று சொல் வதைக் காட்டிலும் வாழ்வின் அடிப்படைக்குத் தேவையான எண்ணற்ற பாடங்களைப் படித்தேன் என்று கூறிக் கொள்வதே அமையும் என எண்ணி மேலே செல்கின்றேன். அத்தகைய ஆக்கநலம் தந்த அந்த அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தையும் அதைத் தோற்றுவித்த அண்ணாமலை வள்ளலையும் வாழ்த்துகிறேன்.