பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/206

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காஞ்சி ഖrുടെ 205 மாவது ஐந்தாறு நாட்கள் சேர நாங்கள் வாழ்ந்த தில்லை. எனவே என் பெற்றோரும் மற்றோரும் என்னை மறுமணம் செய்துகொள்ளுமாறு தூண்டினர். சில பெண்களைப் பெற்றோரும் தாமே வலியவந்து பெண் கொடுக்கவும் முன் வந்தனர். எனக்கும் பெரிய சங்கடமாகி விட்டது. என் அன்னையோ நாள்தோறும் கண்ணிரைப் பெருக்கிக் கொண்டிருந்தனர். தந்தையார் ஏக, பாட்டியும் அகல, நானும் சுற்றிக்கொண்டிருக்க அவர்கள்தான் எத்தனை நாட்கள்-எத்தனை ஆண்டுகள் தனியாக வீட்டைக் காவல் காத்துக் கொண்டிருப்பார்கள். பக்கத்து வீட்டிலேயே பெரியப்பாவும் பெரியம்மாவும் இருந்தபோதிலும் அவர்களும் தனியாக இருந்தமையின் இரண்டு வீடுமே களையற்றிருந்தன. எனவே வீட்டில் நடமாடும் இலக்குமி யாக மருமகள் வர வேண்டும் என அவர்கள் விழைந்ததில் தவறு இல்லையே. அந்த எண்ணத்திலேதான் என் இளவயதையும் கருதாது அப்போதே எனக்குத் திருமணம் செய்து வைத்தனர். ஆனால் அதுவோ பயனற்றுக் கழிந்துவிட்டது. எனவே அவர்கள் எனக்கு மறுமணம் செய்து வைப்பதில் தீவிர மானார்கள். நான் ஒருமுறை அவர்களோடு வாதாடி மறுத்தேன். அதன் காரணமாக என்னை அவர்கள் வைதார்கள். எனவே எனக்கு உலக வாழ்வே துச்சம் என்கின்ற நிலை உண்டாயிற்று. அனைத்தையும் துறந்து எங்காவது சென்றுவிடலாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டேன். ஒரு நாள் விடியலில் எழுந்து நாவிதன் வீட்டிற்குச் சென்றேன். குடுமி எனக்கு நிறைய இருக்கும், அனைத்தை யும் நீக்கி மொட்டை அடித்துக்கொண்டேன். ஆற்றில் மூழ்கி வீட்டிற்கு வந்து உணவு உண்டேன். பிறகு என் கையில் உள்ள சிறு தொகையை எடுத்துக்கொண்டு, வாலாஜாபாத் சென்று மறுநாள் வருவதாக அன்னையிடம் சொல்லிவிட்டுப் புறப்பட்டேன். மேலே ஒரு துண்டு, இடுப்பில் ஒரு வேட்டி.