பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/207

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 206 ஆனந்த முதல் ஆனந்த வரை மடியில் சிறு தொகை, சில தாள் ஒரு எழுதுகோல்; இவற்றோடு புறப்பட்ட நான் நேரே திருத்தணிகைக்குச் சென்று எங்கள் குலதெய்வமாகிய முருகனை வழிபட்டு அவனிடம் வரம் வாங்கிக்கொண்டு பிறகு அவன் காட்டிய திசையில் செல்ல முடிவு ச்ெய்தேன். தணிகை முருகன் எங்கள் குடும்பத்தின் தோன்றாத் துணையாய் நின்று எல்லாக் காலத்திலும் அருள் செய்யும் நிலையினை நினைந்தேன்; வாய் அவன் புகழ் பாடிற்று. ரெயிலில் டிக்கெட் எடுத்து உட்கார்ந்தேன். வண்டி நகரத் தொடங்கிற்று. என் உள்ளமும் எண்ணாததெல்லாம் எண்ணிற்று. இந்தத் துறவு நிலைக்குமா? என்ற கேள்வி பிறந்தது. ரெயிலில் என் முன்பலகையில் ஒரு குடும்பம் திருப்பதிக்குப் புறப்பட்டுச் சென்றுகொண்டிருந்தது; இளந் தம்பதிகள்-இரு குழந்தைகள்-உடன் வந்த மூதாட்டி. இவர்கள் குடும்பம் நல்ல சமயப்பற்றுடையதாகத் தெரிந்தது. என்னைச் சிறிதுநேரம் உற்று நோக்கிய அவர்கள் என்னிடம் பேசத்தொடங்கினர். நான் பெரும்பாலும் கண்மூடிக் கொண்டு-முருகன் புகழ் பாடிக்கொண்டு-இடையிடையே கண்ணிர்விட்டுக்கொண்டு கசிந்து சென்றேன். என்னைப் பற்றி என்ன நினைத்தார்களோ தெரியவில்லை. பேசினர்யார் பேசினர் என்பது நினைவில்லை. என்னை உண்மைத் துறவி என்றே நம்பினர். நானும் துறவிதான் என்றும் தணிகைக்கு வழிபடச் செல்லுகிறேன் என்றும் அடுத்து எங்கே செல்வேன் என்பது எனக்கே தெரியாது என்றும் எனக்கு யாதும் ஊரே யாவரும் கேளிரே என்றும் சொன்னேன். அவர்கள் இந்த இளம் வயதில் மொட்டை அடித்துத் துறவி என நின்ற என் கோலத்தில் ஏதேனும் தெய்வஒளி கண்டார்களோ என்னவோ நானறியேன். குழந்தைகளை என் காலில் கிடத்தி வாழ்த்த வேண்டினர். அவர்கள் குழந்தைகளுக்கு மொட்டை அடித்துக் காது குத்து