பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/222

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காஞ்சி வாழ்க்கை 221 அறைக்கு அழைத்துச் சென்று பிற ஆசிரியர்களுக்கு என்னை அறிமுகம் செய்து வைத்தார். நான் நடத்த வேண்டிய பாடங்களைப் பற்றிக் கூறினார். ஓரிருநாள் கழித்து வகுப் பிற்குச் செல்லலாம் என்றார். இவ்வாறு எனது வாழ்க்கைப் பணி-தமிழ்ப் பணி தொடங்கியது. காஞ்சிவாழ்க்கை ஒருசில ஆண்டுகளே அமைந்தன என்றாலும் பல நூற்றாண்டுகளில் பெறத்தக்க அனுபவங் களை நான் அங்கே பெற்றுவிட்டேன். பின் என் சென்னை வாழ்வுக்கு அங்கே பெற்ற அனுபவங்கள் எனக்குக் கைகொடுத்து உதவின. என் உடன் இருந்த ஆசிரியர் பலரும் என்னிடம் நன்கு கலந்து பழகினர். அப்படியே என்னிடம் பயின்ற உயர்வகுப்பு மாணவர்களுள் பலரும், நான் வயதில் இளைஞனாக இருந்த காரணத்தால், நெருங்கிப் பழகினர். ஊரில் உள்ள அன்பர் பலரும் என்னிடம் அன்பொடு பழகினர். எனவே நான் காஞ்சியில் பல நல்ல அன்பர்களிடையே வாழ்ந்து வந்தேன். ஒரிரு திங்கள் ஊரிலிருந்தே நாள்தோறும் ரெயிலில் வந்தபோது சோர்வும் பல தடங்கல்களும் உண்டான காரணத்தால் என் அன்னையர் என்னைக் காஞ்சியிலேயே இருக்குமாறு பணித்தார்கள். அதே வேளை யில் விரைவில் மறுமணம் செய்துகொண்டு குடும்பத்துடன் அங்கே இருக்கவேண்டும் எனவும் வற்புறுத்தினர். என் இத்துணை மாற்றங்களுக்கு இடையிலும் என் மாமியார் வீட்டில் மாற்றமொன்றுமில்லாத வாழ்வினைக் கண்டேன். இரண்டொரு திங்கள் கழித்து, பள்ளிக்கு அருகிலேயே முதலில் ஒர் அறையை வாடகைக்கு எடுத்துக்கொண்டேன். பிறகு என் மாணவ நண்பர் ஒருவர் வழியே வேறு நல்ல இடமாக அவர்கண்ட ஓரிடத்துக்கு மாற்றிக்கொண்டேன். அங்கே அந்த ஆண்டு எல்லைவரை-சுமார் ஐந்தாறு திங்கள் இருந்தேன். அதற்குள் மறுமண ஏற்பாடுகள் நடைபெற்றன. பள்ளியில் பல நல்லாசிரியர்கள் இருந்தனர். உயர் வகுப்புக்களை எடுத்த திருவாளர்கள் பாக்கியநாதன், பால்