பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/226

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காஞ்சி வாழ்க்கை - 225' குப்பின் வெகு வேகமாக எனக்கு மனம் செய்து வைப்பதில் முயன்றார். அதற்கேற்ப, காஞ்சியிலும் என் மாணவநண்பர் ஒருவர் போக்கு என்னைத் திகைக்க வைத்தது. அவர் தற்போது இல்லை. படிப்பு முடியும் முன்பே மறைந்துவிட்டார். ஒன் பதாம் வகுப்பில் பயிலும்போதே அவருக்கு இருபதுக்குமேல் வயது இருக்கும். அவருக்கு ஏற்ப நான் தங்கியிருந்த வீட்டில் ஒருவர் அவருக்கு உறவானார் போலும். என்னோடு எனக்குத் துணையாக இருந்த அந்த மாணவர், அவருக்கும் துணை யானார் போலும். அதை ஓரளவு மறைமுகமாக:கண்டிக்கும் போது, அவர் என்னையும் அவருக்கு உறவாக்க முயல்வாரோ என்ற ஐயம் பிறந்தது. தனிமையில் வாழ்வதில் இத்தனைச் சங்கடங்கள் இருக்கின்றன என்பதை அப்போதுதான் நான் அறிந்தேன். எனவே அன்னையார், ஏற்பாடு செய்த மண முயற்சிக்கு இணங்கினேன். மேலும் ஊரில் இருந்த என் அன்னையாரும் பெரிய அன்னையாரும் தனித்தனியாகச் சமையல் செய்துகொண்டு, தனித்தனியாகப் பக்கத்தில் பக்கத்தில் வாழ்ந்தநிலை எனக்கு வருத்தத்தைத் தந்தது. இருவரும் உடன்பிறந்தவர்களாக இருந்தும், ஏன் ஒன்றாகவே சமைத்து உண்ணக்கூடாது என்று பலமுறை கேட்பதுண்டு. அவரவர் போக்கு அப்படி என்று ஆறுதல் பெறுவதும் உண்டு. மணம் செய்துகொண்டு, காஞ்சியில் வாழ்க்கை தொடங்கினால் பெரும்பாலும் பெரியம்மா அவர்கள் என்னொடு காஞ்சிபுரம் வந்துவிடுவார்கள் என்ற நிலை யிருந்ததால் அதன்பிறகு அத்தகைய குழப்பம் உண்டாகாது என்று எண்ணியும் இசைந்தேன். நான் இரு குடிக்கும் ஒருமகனாக நின்றமையின் அக்குடிவளர மணம் செய்து கொண்டு இல்லறம் ஏற்கவேண்டுமென்றனர் பலர்; அதனாலும் இசைந்தேன். என் இசைவினை அறிந்தபின் அன்னையார் இருவரும் ஏற்பாட்டிற்கு முனைந்தனர், ஆ-15 -