பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 ஆனந்த முதல் ஆனந்த வரை மரத்தின் மேல் உட்கார்ந்தன. சில கிளிகள் கீழே பார்த்தன. பழத்துண்டுகளும், தானியங்களும் தெரிந்தன போலும். அவற்றை உண்ண விரும்பின. எனினும் ஒரு கிழக்கிளி அவை விரிக்கப்பட்ட வலையில் உள்ளதென்றும், அதில் ஆபத்து இருக்கிறது என்றும் சொல்லிற்றாம். என்றாலும் பெரும்பாலான கிளிகளின் விருப்பப்படி அனைத்தும் பறந்து வந்து கீழ் இறங்கிப் பழங்களைத் தின்னவந்தன. வேடன் வலையில் எல்லாம் சிக்கின. அப்போது எல்லாக் கிளிகளும் அந்தப் பெரிய கிளி சொன்ன பேச்சைக் கேட்காது போனோமே என வருந்தினவாம். ஆயினும் அந்தப் பெரிய கிளி அப்போதும் தளராமல், இப்போதும் ஒன்றும் கெட்டு விடவில்லை. உடனே தாமதிக்காமல் அனைவரும் அப்படியே பறப்போமேயானால் வலை நம்முடன் வந்துவிடும். நாம் வேறு எங்காவது சென்று அறுத்துக்கொள்ளலாம். உடனே வேட்னிடமிருந்து விடுதலைபெற அதுவே வழி என்றதாம். உடனே தாமதம் செய்யாமல் அனைத்தும் பறந்துவிட்டன வாம். பாவம் வேடன் வேகமாக ஓடிவந்தும் அவற்றைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. இவ்வாறு அக்கிளிகள் தப்பின. இதுதான் கதை. கிளி பேசுமா பேசாதா என்றெல் லாம் அன்று நான் ஆராய்ச்சி செய்யவில்லை. தாத்தா சொன்னவற்றை அப்படியே நம்பிவிடுவேன். அவர் இந்தக் கதையைச் சொல்லி ஆகையால் சிறியவர்கள் பெரியவர் சொல்லுவதை எப்போதும் கேட்க வேண்டும்' என்றும், எல் லாரும் ஒன்றாகச் சேர்ந்து வாழ்ந்தால் எதிரியால் நம்மை ஒன்றும் செய்ய முடியாது என்று அறிந்து கொள்ளவேண்டும் என்றும், நல்ல நீதிகளை உடன் சொல்லுவார்கள். ஆம்! இதுபோன்று எத்தனையோ கதைகளை நல்ல நீதிகளோடு இணைத்து எனக்கு அந்த ஐந்தும் நிரம்பாத அறியாப் பருவத் தில் சொல்லுவார்கள். நான் பெரியவனாகிய பிறகு அந்தக் கதை பஞ்ச தந்திரத்தில் உள்ள ஒரு கதை என்று அறிந்த பிறகும்கூட, அதைத் "தாத்தாவின் கதை' என்றுதான் நான்