பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/250

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காஞ்சி வாழ்க்கை 249 வந்தவளை இருந்தவள் நன்கு வரவேற்றாள். இருவருக் கும் எங்கே பூசல் கிளம்புமோ என அஞ்சிய எனக்கு அவர்கள் பழகிய பழக்கம் மன ஆறுதலாக இருந்தது. எனினும் அது என்றும் அப்படியே இருக்குமோ என்று எண்ண, அச்சந்தான் உண்டாயிற்று. பின்னவள் பலவகையால் விட்டுக் கொடுத் தமையினாலேயே அவர்கள் உறவும் அவர்கள் இருவரிடையில் என் உறவும் இனிமையாகக் கழிந்தது. நானும் எல்லாம் இனிமேல் சரியாகிவிடும் என்ற எண்ணத்தில் இருவரோடும் யாதொரு வேறுபாடும் இல்லாமல் பழகினேன். அவர்கள் இருவரும் சிலவேளைகளில் எனக்குச் சோதனை காட்டு வார்கள். பெரும்பாலும் நான் அவற்றில் வெற்றி பெறுவ துண்டு. ஒன்றே தற்போது நினைவில் உள்ளது. ஒரு பொருளை...... என்ன வென்பது நினைவில் இல்லை-அவர் களுக்கு எட்டாத உயரிடத்தில் வைத்துவிட்டு இருவரும் என்னை அழைத்தனர். ஒருவர் அதை எடுத்துத் தம் கையில் தரவேண்டும் என்றனர். மற்றவர் அவ்வாறு செய்யக்கூடாது என்றனர். எதை மேற்கொள்வது என்று தடுமாறினேன். கடையில் அந்தப் பொருளை அங்கிருந்து எடுத்துச் சற்றே தாழ்வான இடத்தில் வைத்து விலகிவிட்டேன். இருவர் சொன்னதையும் செய்தும் விட்டேன்-செய்யவும் இல்லை என்று இருவரும் திருப்தியுற்றதாக என்னிடம் கூறி நான் சோதனையில் வெற்றி பெற்றதாகப் பாராட்டினர். ஆம்! அந்த நல்ல மகிழ்ச்சிக்கிடையிலே இருவரும் கருவுற்றனர். அது என் அன்னையர் இருவருக்கும் பெருமகிழ்ச்சி தந்தது. எட்டாவது மாதம் செயயும் சிறப்பு இருவருக்கும் நடை பெற்றது. அடுத்தடுத்த நாட்களில் எங்கள் ஊரில் என் இல்லத்தில் தொடர்ந்து நடைபெற்ற அந்த விழாக்களில் ஒருவர் மாற்றி ஒருவர் எல்லாப் பொறுப்பினையும் ஏற்றுச் சிறக்கச் செய்தனர் இருவரும். வந்தவர்கள் அனைவரும் மகிழ்ந்தனர். ஒருநாள் மாலை நடைபெற்ற சொற்பொழிவில்