384 ஆனந்த முதல் ஆனந்த வரை நிதிக்கே ஈந்தார். நாடகங்களுள் ஒன்று நீதி தேவன் மயக்கம்' என்பதாகும். உடன் திரு. தேவராசன் வாலாஜாபாத்திலும் சுற்றுப்புற ஊர்களிலும் உள்ள முக்கியமானவர்களை அழைத்து உயர் நிலைப்பள்ளி பற்றிப் பேசினார். அப்போது செங்கற்பட்டு மாவட்ட மன்றம் கலைக்கப் பெற்று திரு. புருடோத்தம முதலியார் தனி அலுவலராகச் செயலாற்றினார். பனகல் அரசரிடம் பணிபுரிந்த அந்த நாள் தொட்டு, அவர் சென்ற இடமெல்லாம் சிறக்கப் பணியாற்றியவர். அவர் செங்கற் பட்டு மாவட்டப் பொறுப்பை ஏற்றபோது, அந்த மாவட்ட அமைப்பு எல்லையில் இரு உயர்நிலைப் பள்ளிகளே இருந்தன. ஆனால் அவர் இருந்த மூன்று ஆண்டுகள் பதினேழு புதிய உயர்நிலைப்பள்ளிகளை உண்டாக்கினார். அதில் முதல் பள்ளி எங்கள் வாலாஜாபாத் பள்ளியேயாகும். திரு. தேவராசன் அவர்களும் நானும் அவரை அணுகினோம். அவர் எனக்கு முன்பே அறிமுகமான வராதலால் உடன் செயல்படத் தொடங்கினார். பேரறிஞர் அண்ணா அவர்களும் அவர்தம் உற்ற நண்பர். எனவே பணிக்கு உரிய செயல்கள் தொடங்கப் பெற்றன. இருபத்தை யாயிரம் ரூபாயும் ஆறு ஏக்கர் நிலமும் தந்தால் மாவட்ட മേbutiഞഖഥക്ഷേമേ பள்ளி தொடங்கலாம் என்று ஏற்பாடாயிற்று. திரு. தேவராசன் அவர்களைத் தலைவராகவும் என்னைச் செயலாளனாகவும் கொண்டு 95 பள்ளிக் குழு அமைக்கப் பெற்றது. இடத்துக்கு என்ன செய்வது எனத் தயங்கினோம். அப்போது மாண்புமிகு பக்த வத்சலம் அவர்கள் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந் தார். இளமை முதலே என்னை அவர் அறிவார் ஆதலால் அவரிடம் சென்றோம். வாலாஜாபாத் ரெயில்நிலை
பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/384
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை