பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளமையின் நினைவுகள் 37 தார்கள். நாள்தோறும் வீட்டில் உட்கார வைத்து ஆசிரியரைப் போல் பாடங்களைச் சொல்லிக் கொடுப்பார்கள் எல்லாவற்றிற்கும் மேலாக என் வாழ்வை ஒளிபெறச் செய்வ தற்காகவே தன் வாழ்வை ஒறுத்துத்தியாகம் செய்து, எனக் காகவே வாழ்ந்து, நான் செம்மை நெறியில் வாழ வழிகாட்டி யாக நின்று தெய்வமாக விளங்கினார்கள்; விளங்கி வருகிறார்கள். இன்றும் நான் அல்லலுறும்போதும். அன்றி மகிழ்வில் திளைக்கும் போதும், கனவில் தோன்றி நலக்கேடு களை அறிவிக்கும் தெய்வமாக நிற்கின்றார்கள். காலஞ் சென்ற என் மனைவி சந்திராமணியின் கனவில் அடிக்கடி தோன்றிக் குடும்ப நிலைபற்றி எல்லாம் குறிப்பாக விளக்கிச் சென்றதாகப் பலமுறை அவள் கூறக் கேட்டிருக்கிறேன்அனுபவித்தும் இருக்கிறேன். ஆம். இன்றும் அன்னையும் மறைந்த மனினவி சந்திராமணியும் என் குடிகாக்கும் தெய்வங்களாக இருபுறமும் எங்களைக் காத்து வருகிறார்கள் என்பதை நான் முற்றும் நம்புகிறேன். அவர்கள் வழி என் கான் முளைகள் வாழும் வழியறிந்து சிறப்பார்கள் என்னும் துணிபுடையேன். 4. உடன்பிறந்தார் சுற்றத்தார். நான் தனியாகப் பிறந்தேன். கூடப்பிறந்த ஆணோ பெண்ணோ கிடையாது. பிறந்தவனே நான் ஒருவன்தான். யாரும் பிறந்து இறக்கவும் இல்லை. எங்கள் வீட்டில் குழந் தைகள் பிறந்து இறக்கும் நிலை என்றைக்கும் கிடையாதாம். 'எனவே எனக்கு உடன் பிறந்தவர்கள் என்று யாரும் கிடையாது. என்றாலும் என் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் உடன் பிறந்தவர்கள் இருந்தனர். ஆனால் ஒருவரும் எங்கள் குடும்பத்துக்கு உதவி செய்தது கிடையாது. என் அப்பாவுடன்