பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/407

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பச்சையப்பரில் 407 இவ்வாறு என் வாழ்வில் பாதியினை இன்பமாகக் கழித்த பச்சையப்பர் வாழ்வு என்னைப் பல வகையில் உயர்த்தி உலகுக்கு அறிமுகம் செய்து வைத்தது, அரசியல், ஆன்மீகம், சமுதாயம் இன்னபிற துறைகளில் உள்ள பெரியவர் க்ளெல்லாம் எனக்கு இக்காலத்தில் அறிமுகமாயினர். வெற்று ஆளாக சென்னை வந்த எனக்கு இருக்க விடும்.என் மக்கள் மூவருக்கும் தனித்தனி வீடும் அமைத்க வழிவகுத்தன. இந்தப் பணி ஆண்டுகளில் ஊரில் உள்ள நிலங்களை விற்றே இவ்வீடுகளை அமைத்தேன் என்றாலும் அதற்கு மூல காரண மான நிலம் பெறவும் பிற வசதிகள் பெறவும் இக்காலத்தில் முடிந்தது. பச்சையப்பர் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர் என்றால் ஒரு பெரும்திப்பு எங்கும் இருந்தது. பின் என் அன்னையின் கல்வி அறப்பணிக்கு இடம் பெற்று, கட்டடங் கள் கட்டி வளர்ச்சி பெறும் நிலையிலும் பச்சையப்பரை மறவா வகையில் என் வாழ்நாள் நன்கு கழிந்து வருகிறது. என் வாழ்நாளில்-அறுபது ஆண்டுகளில் (ஆனந்த முதல்ஆனந்தவரை) பாதி முப்பது ஆண்டுகள் என்னை அரவணைத்து, ஆக்கநெறி வகுத்து என் வாழ்வை வழிப் படுத்திய பச்சையப்பரை என்றும் வாழ்த்தக் கடமைப்பட்டுள் ளேன். வாழ்க பச்சையப்பர்! காஞ்சியில் பிறந்த பச்சையப்பர், காஞ்சியைச் சேர்ந்த என்னைக் காப்பாற்றிய நிலை பெரிது; சிறந்தது; போற்றுதற்குரியது.