பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளமையின் நினைவுகள் 45 கொண்டுவந்து பூசை செய்வேன். அப்படியே சில சமயங்கள் என்னை அறியாது உட்கார்ந்து விடுவதும் உண்டு. இரண் டொரு நல்ல நண்பர்கள் என்னுடன் ஒத்துழைத்து நீர் ஊற்றுத் தோண்டி உதவுவார்கள். சிலர் கிண்டல் செய்து மணலை வாரியும் இறைப்பார்கள். அன்று அழைத்துச் சென்ற நண்பர்கள் அந்தக் கிண்டல்காரர்கள்தாம். நான் அவர் களோடு வேடிக்கையாக ஆற்றங்கரைக்குச் சென்றேன். அங்கே ஒரு நாய்க்குட்டி உயிருக்கு ஊசலாடிக் கொண்டிருந்தது. கண் விழிக்கவில்லை; அசைவும் இல்லை. மூச்சு மட்டும் அதிகமாக முட்டிக்கொண்டு வந்தது. அந்த நண்பர்கள் இருவரும் அதைக் கையில் எடுத்துக்கொண்டு நடு ஆற்றிற்கு அழைத்துச் சென்றார்கள். அங்கு பள்ளமும் தோண்டினார்கள். பிறகு என்னிடம் இந்த நாய்க்குட்டிக்கு எல்லாம் ஒடுங்கிவிட்டது. அது மூச்சுவிடுவதைப் பார்த்தால் ஐயோ பாவம் என் றில்லையா” என்றார்கள். உண்மையிலேயே அந்தக் காட்சி கொடுமையாகத்தான் இருந்தது. நான் ஆம்’ என்றேன். நீ பூசை செய்வதைப்போல் இன்றும் செய், ஆனால் இந்த நாய்க்குட்டியைப் பள்ளம் தோண்டி அதில் மூடி அதன்மேல் சிவலிங்கம் எழுப்பினால் அப்போது நாய் துன்பம் இல்லாமல் சாகும் என்றார்கள். நானும் சரி என்றேன். மூவரும் சேர்ந்து குழி தோண்டிப் பின் கோயில் எடுக்கலாம் என்றேன். அவர்கள் குழியெல்லாம் தோண்டினார்கள். என்றாலும் கடைசியில் மூடிச் சிவலிங்கம் செய்யும் போது தாங்கள் பூக்கள் கொண்டு வருவதாகவும் அதற்குள் எல்லாம் செய்தாக வேண்டும் என்றும் சொன்னார்கள். ஆனால் அதற்குள் நாயின் மூச்சு ஒடுங்கி உயிர் பிரிந்தேவிட்டது. நான் என்ன செய்வது என அறியாது திகைத்தேன். வந்திருந்தவர்களோ என்னைவிட ஒன்றிரண்டு வயது மூத்தவர்கள். அவர்கள் சொல்லியபடி செய்யாவிட்டால் என்னை அடிக்கவும் செய் வார்கள். நாம் ஏன் வந்தோம் என நடுங்கினேன். என்றா