பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளமையின் நினைவுகள் 49 பட்ட அந்தப் போர்டு பாடசாலையின் தலைமை ஆசிரியராய் வந்தவர். ஆதலால் அதை நன்றாக நடத்தி நல்ல பெயர் வாங்க முயன்றார். ஊரில் சிலரும் அதுவரையில் வராத பள்ளிக்கூடம் வந்ததால், அதை வளர்க்கவேண்டும் என்று முயற்சி செய்தார்கள். ஆசிரியர்கள் மூவர் அல்லது நால்வர் இருந்தார்கள் என நினைக்கிறேன். ஐந்தாம் வகுப்பு வரை அப்பள்ளியில் இருந்தது. அங்கேயே ஐந்தாவது வரை படித்தேன். என்றாலும் ஊரில் சிலர் அங்கே படிப்பு நன்றாக வராது என்றும், வாலாஜாபாத்தில் நன்றாகச் சொல்லிக் கொடுப்பார்கள் என்றும் தத்தம் குழந்தைகளை இரண்டாவது மூன்றாவது வகுப்புகளுக்குக்கூடப் பாலாற்றைக் கடந்து செல்லுமாறு ஏழு எட்டுவயதுடைய பிள்ளைகளை வாலாஜாபாத் அனுப்புவார்கள். நானும் அவர்களோடு செல்ல் விரும்பிய நாட்கள் பல உண்டு. என்றாலும் பின்னால் ஆறாம் வகுப்புக்கு வாலாஜாபாத் சென்று படித்தபோது அதில் உள்ள தொல்லைகளை அறிந்தேன். அப்படி அங்கு அதிகமாக ஒன்றும் சொல்லிக் கொடுத்துவிடவில்லை. பாவம் இளம் வயதில் தொல்லைகளுக்குட்பட்டுச் சென்று படித்த என் நண்பர் சிலருடைய நிலை இரங்கத்தக்கதாகும். நான் ஐந்தாம் வகுப்புவரை ஊரிலேயே அந்தப் போர்டு பள்ளியில்தான் படித்துக்கொண்டிருந்தேன். பள்ளி ஆசிரியர் கள் ஊக்கத்தோடு பாடம் சொல்லிக்கொடுப்பார்கள். சில புதுப்புதுப் பாட்டுகள் கற்றுத் தருவார்கள். இன்ஸ்பெக்டர்’ வரும்போது சிறுசிறு நாடகங்கள் நடிக்கக் கற்றுக் தருவார்கள். அந்தக் காலத்தில் பள்ளிக்கூடத்துக்கு என்று புதிதாக வேறு கட்டடம் கட்ட ஆரம்பித்தார்கள் ஜில்லா போர்டார். எனவே மக்களுக்கெல்லாம் ஒரே மகிழ்ச்சி. நான்காயிர ரூபாயில் அமைந்த கட்டடம் அது. ஏதோ 'ஜில்லா போர்டார் தங்கள் சொந்தப் பணத்தைக் கொண்டுவந்து ஆ-4