பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 ஆனந்த முதல் ஆனந்த வரை கொண்டிருந்தோம், அவற்றை ஒட்டிச் செல்வது வழக்கம். மாடுகள் மெதுவாகச் சென்று கொண்டிருந்தன. நானும் அவற்றின் பின்னால் மெதுவாக அசைந்தாடிச் சென்று கொண்டே இருந்தேன், இடது கையை மடித்து வலது கையால் மத்தளத்தைத் தட்டுவதுபோல் தட்டிக் கொண்டு சென்றேன். வாய் ஏதோ ஒரு பாட்டை முணுமுணுத்துக் கொண்டிருந்திருக்கும். நான் அந்த நண்பர் வீட்டுத் தெரு வழியே செல்லும்போது அப்பெரியவர் திண்ணை.மீது உட் கார்ந்திருந்தார். டே சிவானந்தம் என்று அவர் கூப்பிட் டார். என்னை முழுப் பெயரோடு ஊரில் யாரும் அந்நாளில் கூப்பிடமாட்டார்கள், மேற்சொன்னபடிதான் கூப்பிடுவார் கள். வீட்டில் எனக்குப் பெயர் வைத்ததே ஒரு வேடிக்கை. எங்கள் குடும்பத்தில் சில தலைமுறைகளுக்கு முன்பு யாரோ பரமசிவ முதலியார் என்ற ஒருவர் வாழ்ந்து வந்தாராம். அவர் எங்கோ தெற்கே திருச்சிராப்பள்ளி சென்று தாசில்தார் உத்தியோகம்கூடப் பார்த்திருக்கிறாராம். அந்தக் காலத்தில், ஹைதர் அலி, திப்புசுல்தான் சண்டைகள் நடந்தன போலும்; வெள்ளைக்காரர் உள்ளே நுழைந்த காலம், அவர் அந்தக் கலகம் நடைபெற்ற காலத்தில் வாழ்ந்தவராம். நான் இன்று முதல் மகாயுத்தமாகிய கலகம் நடக்கத் தொடங்கிய 1914இல் பிறந்தவன். எனவே அந்தக் கும்பினி யுத்தகாலத்தில் வாழ்ந்த பரமசிவ முதலியார்தான் இப்போது மறுபடியும் உலக யுத்த காலத்தில் வந்து பிறந்தார் என்று கருதி எனக்குப் பரமசிவம் எனப் பெயரிட்டார்களாம், மேலும் ஆனந்த வருடத்தில் பிறந்தமையால் பரமசிவானந்த'மாக்கப்பட்டேன். என்றா லும் ஊரில் என்னை எல்லாரும் சிவானந்தம் என்றே கூப்பிடுவார்கள். 'சிவானந்தம் வாடா என்று கூப்பிட்டார் அந்தப் பெரியவர். எனக்கு அவரிடம் எப்போதுமே ஒரு அச்சம் உண்டு. ஏன்? ஊரில் எல்லாரிடமுமே நான் பயந்து நடந்து வந்தேன்.