பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளமையின் நினைவுகள் 59 மெள்ள அருகில் சென்றேன். கை அசைவற்று நின்றது. 'இப்போது என்ன செய்து கொண்டு போனாய்?" என்றார் அவர். நான் ஒன்றும் செய்யவில்லையே, அதோ பசுமாடுகள் போகின்றன, அவற்றை ஒட்டிக் கொண்டு ஆற்றுக்குப் போகிறேன் நான் என்றேன். அது சரி. கையை ஏன் அப்படி மடித்து இவ்வாறு அடித்துக் கொண்டு போகிறாய் பயித்தியம் போல’ என்றார். நான் சும்மா’ என்று வாய்மூடி நின்றேன். அவர் என்னடா சும்மா! எல்லாரும் பெரிய மத்தளக்காரர் ஆகிவிடலாம் என்ற யோசனையோ! முட்டாள். மத்தளம் அடிப்பதென்றால் உன் போன்ற முட்டாள்களுக்கு அவ்வளவு சுலபம் அல்ல; தெரிஞ்சுதா! எங்கள் பையன் கற்றுக் கொள்ளு கிறான் என்றால் அதைப் பார்த்து நீயும் கைத்தட்டுகிறாயே; புலியைப் பார்த்துப் பூனை சூடு போட்டுக் கொள்வது போல அல்லவா இருக்கிறது. போ! இனிமேல் அந்த மாதிரியெல்லாம் கைதட்டி கால்தட்டி நின்றால் உதைப்பேன்’ என அதட்டி ஆணையிட்டார். நான் உண்மையிலேயே பயந்து போய் விட்டேன். ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டி என்றபடி, நான் பேசாமல் வாய்மூடிக் கிடந்தாலும், மேலே கேட்க யாரும் ஆண் துணை இல்லாததாலும், எல்லாரும் அடித்து உதைப்பதாகவே பேசுவார்கள். நான் எல்லாவற்றையும் கேட்டு வாய்மூடிக் கொண்டு போய் விடுவேன். என்றாலும் எங்கள் அம்மா காதில் இவை எல்லாம் விழுந்தால் அவர் பொறுக்கமாட்டார். உடனே அவர்களோடு சண்டையிட்டு, அவர்கள் தவறுகளை உணர்த்திவிடுவார். பெரியவர் சொன்னபடி நான் நடப்ப தாகத் தலையசைத்தேன். ஆமாம் இனிமேல் இப்படிப் 'பார்த்தால் உதைதான்’ என மறுபடியும் எச்சரித்து அனுப்பினார். இதை நான் யாரிடமும் சொல்லவில்லை. ஆனாலும் அவர் இது பற்றி யாரிடமாவது பெருமையாகச் சொல்லி