பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 ஆனந்த முதல் ஆனந்த வரை என்றாலும் உள்ளத்தில் மட்டும் ஏதோ ஒன்று உறுத்திக் கொண்டிருந்தது. - நான் உண்டுகொண்டே இருந்த வேளையில் என் ஊரில் இருந்த பெரியவர் ஒருவர் தம் வயல் வேலையை முடித்துக் கொண்டு குளிப்பதற்காக அங்கு வந்து உட்கார்ந்தார். நான் ஏதோ உண்பதைக்கண்டு டே பையா' என்னடா தின்கிறாய் என்று உரிமையோடு கேட்டார். நான் பொங்கலென்று கூறி, அது வந்த விதத்தையும் சொன்னேன். அவர் அது பற்றி வியப்படையவில்லை. தர்மகர்த்தா வீட்டிற்கு, டின் டின்னாகக் கடலை எண்ணெயும் பிற பண்டங்களும் டன் டன்னாக கோயில் இலுப்பை விறகும் போகும் என்றும் அவர்கள் வீட்டு வாழ்வே இதனால்தான் நடைபெறுகிற தென்றும் கூறிச் சிரித்தார். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. இவர் என்ன அறக் காப்பாளரா அன்றி அறக்கொலைஞரா' என்று எண்ணத் தோன்றிவிட்டது. பொழுதும் போயிற்று. அதற்குள் இருட்டத் தொடங்கிவிட்டது. நான் நண்பனுடன் எழுந்து வீட்டுக்கு வந்துவிட்டேன். - என்றாலும் அன்று இரவெல்லாம் என்னென்னவோ நினைவுகள் உண்டாயின. அந்தக் கோயிலின் தர்மகர்த்தா வேலையின் பொருட்டே ஊர் இரண்டுபட்டது. பின்னால் பெருங் கொலைகள் நடக்கும் வகையில் ஊரில் இரண்டு கட்சிகள் உண்டாகிவிட்டன. ஒவ்வொரு தேர்தல் சமயத்தில் தடிச் சண்டைகள் நடைபெறும். வெளியூருக்குச் சென்று தனி ஆளாய் வந்தால் இருட்டும் சமயத்தில் எதிர்க்கட்சியைச் சேர்ந்த நான்கைந்து பேர் அந்த ஆளை நையப் புடைத்து அனுப்புவார்கள். மறுநாள் இது திருப்பி மர்ற்றுக் கட்சி யாருக்கு வழங்கப்பெறும். இந்த நிலையில் சில நாட்கள் பெண்கள் வெளியே வரக்கூட அஞ்சுவார்கள். கோவிலுக்காக இம்மாதிரிக் கட்சிகள் பல ஊர்களில் இருக்கின்றனவாம். பணம் உள்ள கோயிலாயின், அங்கே வேளாளரும் குடியிருப்