பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 ஆனந்த முதல் ஆனந்த வரை பட்டு வேட்டியைப் போல் வெளிக்குப் பகட்டாகத் தெரிந் தாலும், நான் மிக மிக அல்லலுற்ற வாழ்வையே அன்று தொட்டு இன்று வரை அனுபவித்து வருகிறேன் என்னலாம். ஆகவே ஆண்டவனைக் காணும் தோறும் அலறி அழுவது என் வழக்கமாகிவிட்டது. இளமையில் பக்தி ஒழுக்கம் பூண்ட என் பாட்டியுடன் அடிக்கடி கோயிலுக்குச் சென்று வழிபட்டு அழுது காமுற்று அரற்றும் வழக்கம் என் வாழ்வின் வழக்க மாகிவிட்டது. வாழ்வில் உற்றவரை ஒருவர் பின் ஒருவராகப் பிரிந்து கொண்டும். எதிர்பாராது பல்வேறு கொடுமைகளில் பட்டுழன்றும் வாழும் என் வாழ்வு என்றும் சோலை வனமாகக் காட்சியளித்த்தில்லை. சிற்சில சமயங்களில் என் மனம் பாலைவனத்தைச் சோலைவனமாக்க முயலும். என்றாலும் அதுவும் முழு வெற்றி பெற்றதில்லை. ஆயினும் சிலர் என் வாழ்வைக் கண்டு பொறாமையும் கொள்ளும் அளவுக்குப் புறத்தோற்றம் அமைந்து விட்டது. அன்றும் அப்படித்தான் நான் ஆண்டவன் முன் அழுது புலம்பிக் கொண்டிருந்த அதே வேளையில் என் புறத்தைக் காட்டும் அந்தப் பட்டு வேட்டியைக் கண்டு பலர் பலவாறு பேசிக் கொண்டனர். என் பக்கத்தில என ஒரு சாலை மாணவரும நணபரும நின்று கொண்டிருந்தார். அவர் தற்போது இல்லை. இறந்து நெடுங்காலமாயிற்று. அவர் பெயர்கூடச் சரியாக எனக்குத் தற்போது நினைவில் இல்லை. வெங்கிடகிருட்டினன் என எண்ணுகிறேன். சரியோ தப்போ தெரியாது. அவர் தன் மாமாவுடன் அருகில் நின்றிருந்தார் போலும். நான் என்னை மறந்து இறைவனை நினைத்திருந்த அந்த வேளையில் என் வேட்டியை யாரோ பற்றி இழுப்பது போன்று இருந்தது. நான் யார் என்று திரும்பிப் பார்த்தேன். அவர்தான் - என் நண்பர் - என் வேட்டியைப் பிடித்து அதன் மழமழப்பைக் கைகளால் சுவைத்துக் கொண்டிருந்தார். தீப ஆராதனையும்