பக்கம்:ஆபரேஷனுக்கு அஞ்சவேண்டாம்.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உண்மையிலேயே மனிதன் கலை, இசை, இலக்கியம் போன்ற படைப்புத் தொழில் செய்வதற்கு வேண்டிய சக்தியை அளிப்பது விதையில் உண்டாகும் ஹார்மோன் சுரப்பு நீரேயாகும். ஆதலால் ஆப்பரேஷன் செய்தால் மூளைக்கோளாறு உண்டாகும் என்று கூறுவோர்க்கே மூளைக்கோளாறு ஏற்பட்டிருக்கிறது என்று கூற வேண்டியவர்களாக இருக்கின்றோம்.

ஆகவே நண்பர்களே ! ஆப்பரேஷன் செய்வதால், அபாயம் எதுவும் உண்டாகாது. காதல் இன்பம் முன் போலவே துய்க்கலாம். ஆண்மை என்பது அணுவளவும் குறையாது. அறிவு கெட்டுப் போகாது. அறிவு சக்தி அதிகப்படவே செய்யும்.

குழந்தை மட்டும் பிறக்காது. மூன்று குழந்தைகள் போதும். அவர்களை அறிவறிந்த நன்மக்களாக வளர்க்கும் பெரும்பேற்றுடன் இன்பமாய் வாழுங்கள். அது உங்களுக்கும் நன்மை. உங்களைப் பெற்றெடுத்த நாட்டிற்கும் நன்மை.


குறிப்பு

(1) அரசாங்க மருத்துவ இல்லங்களில் இந்த ஆப்பரேஷனை இலவசமாகச் செய்கிறார்கள்.

(2) அரசாங்க ஊழியர்கள் செய்து கொண்டால் சம்பளத்துடன் ஏழு நாள் ரஜா பெறுவார்கள்.