பக்கம்:ஆப்பிள் பசி.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'குட்' என்ருர் டைரக்ட்ர். ஒத்திகை நின்றது. சுபத்ரா முகத்தில் வியர்வை அரும்ப, உதவிப் பெண் அவ்ஸ்’அருகே

டினள்.

'பிரமாதம், உங்கள் நடிப்பு!” என்று அவளிட்ம் சாமண்ணு சொன்னபோது, அவள் மலர்ச்சியாகச் சிரித்து, 'தாங்க்ஸ்' என்ருள்.

அடுத்த ஷாட்"டில் சாமண்ணு 'ஆ' என்ற குரல் கேட்டு சகுந்தலாவைத் திரும்பிப் பார்க்கிருன். பிரமிப்பும், திகைப் பும் காட்டுகிருன் முள்ளை. எடுக்கத் துடிக்கிருன்.

அடேயப்பா! சாமண்ணுவுக்கு அந்த நடிப்பு உச்சம் எப்படி வந்தது? திரும்பிய முகத்தில் அத்தனை உணர்ச்சியும் பின்னல் போட்டதோடு ஒரு துளிக் காத்ல் உணர்வும் தனித்துத் தெரிந் தது.

அசந்து போனர் டைரக்டர். சர்மண்ணு அருகில் வந்து, "எக்ஸெலண்ட்' என்ருள் சுபத்ரா. - 'தாங்க்ஸ்' என்ருன் அவன். - - அடுத்து ஆரம்பக் காதல் வைபவங்கள் ஒவ்வொன்ருகச் சுடப்பட்டன. எல்லாம் கண்களின் நடிப்பாகப் போய்விட, இருவரும் அத்தனை உணர்ச்சிகளையும் முகத்தில் கொண்டு வந்து கர்ட்ட, ஸெட்டில் பார்த்தவர்கள் அனைவரும் தங்கள் தங்கள் உள்ளங்களில் 'காதல் அரும்புவதை உணர்ந்தார்கள். டைரக்டர் 'குட், வெரிகுட் என்றெல்லாம் பாராட்ட, சேட் ஆகாயத்தில் மிதந்து கொண்டிருந்தார்.

அந்தக் காட்சிகள் இரண்டு நாள் தொடர்ந்து நடந்தன. ஒவ்வொரு நாளும் ஷல்ட்டிங் பார்க்கும் கூட்ட்ம் அதிகம் கூடியது. -

சாமண்ணு - சுபத்ரா நடிப்பு பார்ப்பவர் மனதில் ஓர் ஆழமான முத்திரையை ஏற்படுத்தி மறக்க முடியாத காட்சி யாக மனத்தில் பதிந்துவிட்டது.

மூன்ரும் நாள் சுபத்ரா சாமண்ணுவை இரவுச் சாபபாட்டுக் குத் தன் வீட்டுக்கு அழைத்தாள்.

ஹல்க்ளிக் கரையில் பெரிய நந்தவனத்துடன் மாளிகை யாக இருந்தது சுபத்ராவின் வீடு. இளநீலத்தில் பட்டு உடுத்தி, நகை ஏதும் இல்லாமல், தலையை அருவியாக அவிழ்த்து விட் டிருந்தாள். அவளுடைய இயற்கை வடிவம் செயற்கையோடு கைகோத்துக் கொண்டு ஒரு மாற்று அழகு காண்பித்தது.

சொப்பனத்தில் புகுந்தது போன்ற உணர்வில் சாமண்ணு மயங்கினன். சில மாதங்கள் முன் வரை வறுமையில் வாடிய வனுக்கு, அழுக்கு வேட்டியும், ரெடிமேட் கதர்ச்சட்டையும் போட்டு அலைந்த அவனுக்கு, இப்படி ஓர் அரண்மனை யோகம் கிடைக்கும் என்று நினைக்கவே இல்லை! அவளோடு அரைகுறை

16 0.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆப்பிள்_பசி.pdf/154&oldid=1028110" இலிருந்து மீள்விக்கப்பட்டது