பக்கம்:ஆய்வுக் கட்டுரைகள்.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 0.6 வளையல்

கொள்ளவில்லை. எதிர்பார்த்திருந்த ஒன்று திடீரென்று நிகழ்ந்தது போன்ற நிலையில் காணப்பட்டாள். கடற்கரை நோக்கித் தோழி திரும்பி விட்டாள்.

இவளையோ தலைவி எண்ணியிருப்பாள்? அவள் அரசனது கவ்வுக் கைகளுக்குள் கிடந்திருப்பாள். வாலெயிறு ஊறிய - நீருண்ட மன்னனது வாயில் மன்மதன் மாம்பூவாம் மூன்றாவது அம்பால் தைத்திருப்பான். பருவக் குமரியின் பக்குவம் பெற்ற உடல் மணத்தை உயிர்த்த மூக்கில் மன்மதன் நான்காவது குவளை மலராம் அம்பால் குத்தியிருப்பான். உற்று இன்பங் கண்ட மன்மதனது உடலில் இறுதிமலராம் தாமரை மலரம்பைப் பதித்திருப்பான். ஆயிரம் அம்புகளானாலும் அமர்க்களத்தில் ஆற்றி நின்று மாற்றாரைப் புறங்கண்ட மன்னன் இந்த ஐந்து அம்புகளால் அடிப்பட்டுப் பீலிவளையின் இரு கண்ணம்பின் அடியால் மயங்கி அவளைப்பணிந்து குற்றேவல் செய்திருப் பான், '0

'கண் டு கேட்டுண்டு பிர்த் துற்று ணரும் ஐம்புலமும்- ఢా ஒண்டொடி கண்ணே உள' - என்னும் குறளுக்குப் பொருளை ஆராய்ந் திருப்பான். இனி பும் அந்தக் கதையை விவரிக்க வேண்டா. மேலே கேள்: - -

தோழி திரும்பிக் கடற்கரைக்கு வந்தாள். காத்துக் கிடந்த ஏவலர்கள் மரக்கலத்தினின்றும் வந்த செய்தியறிந்தனர். ஒரு வனைத் தவிர மற்றவர் பால் இச்செய்தி ஏதும் புதுமையான வியப்பைத் தோற்றுவிக்கவில்லை. அரை குறையாகப் புரிந்த

الله *

ஒருவன்(செர்ன்னான்;

அரசிளங்குமரி பிறந்த நாளில் கணி சொன்னது:உண்மை யாகி விட்டது.

ஒன்றும் புரியாதவன் கேட்டான்: என்ன சொன்னான் கணி? مستحدة، م--- aمصنع இதையா அப்பொழுதே சொன்னான்?

10, மணி : 24 : 81 11. குறள் : 1.101