பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மேலே கூறப்பட்ட பாண்டியர்களே சங்க காலத் தொகை நூல்களின் மூலமாக நாம் அறிந்துகொள்ளக் கூடியவர்கள். அவர்கள் ஏறத்தாழ எந்த நூற்ருண்டில் ஆட்சி செய்திருக்கலாம் எனத் தெளிந்து கொள்வதற்குப்புகளுர் கல்வெட்டு பெருந்துணை புரிகின்றது. இவற்ருேடு அயல் நாட்டார் குறிப்புகளையும் ஒப்பிட்டு நோக்குமிடத்து உண்மை புலன கும். இப்பாண்டிய அரசர்கள் யாவரும் ஒருவருக்குப்பின் ஒருவர் ஆட்சி செய்ததாகக் கொள்வதைவிட அவர்களுள் சிலர் ஒரே காலத்தில் சிறு சிறு பகுதிகளே ஆண்டதாகக் கொள்வது பொருத்தமாகும். இதற்குரிய சான்றுகளே இங்கு விரிப்பின் பெருகும் என அஞ்சி அவற்றைக் கூருது விடுத்துள்ளேன். இது இன்னும் ஆராய்தற்குரித்து. 126

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/134&oldid=743252" இலிருந்து மீள்விக்கப்பட்டது