உடன்புணர் கொள்கைக் காதலர் சிறந்தானே வழிபடீஇச் சென்றனள், அறம் தலைப்பிரியா ஆறும் மற்று அதுவே (36)எனும் கூற்றுக்களும் சமுதாயத்தின் கொள் கையும் இதுவாகவே இருந்திருக்கின்றது என்பதைக் காட்டும் . 3.2. மரபு மனத்தைப் போன்றே காதல் மணத்தையும், தாயும் சமூகமும் ஏற்றுக் கொண்டிருக்கின்றனர். அறிவும் அநுபவமும் கொண்ட பெற்றேர் தகுதி அறிந்து செய்யும் திருமணம் அன்றி, அறிவு ஆராய்ச்சிக்கோ, உயர்வு தாழ்வு கருதித் தள்ள ல் கொள்ளலுக்கே இடம் இன்றி க், காரணகாரியத் தொடர்பின் றி உள்ள ம் ஒடும் ஓட்டத்திற்கேற்ப இணே யாத காதல் மண மும் தெய்வத்தால் ஏற்படுத்தப்பட்ட உறவு எனக் கொள்ளப்பட்டிருக்கின்றது (37). களவு வெளிப்படாமலேயே (38) களவு முறையாக வெளிப்படுத்தப்பட்டு (அறத்தொடு நின்றபின்), உடன் பே க்கின் பின் எனக் காதல்மனம் பல நிலைகளில் நிறைவேறியுள்ளது. எவ்வகையில் நடந்தாலும் தாமாக ம னந்தாலும் பெற்றேர் மண முடித்தாலும்) மணந்தபி ன் எத்தகைய வேறுபாடும் இல்லே. எனினும் விரும்பியவனே மணப்பதில் குற்றம் காதை தாயும் சமூகமும், திருமணத்திற்கு முன் ஒருத்தி ஒருவனுடன் கொள்ளும் தொடர்பைக் கண்டித்தே உள்ளனர். அவ்வந் நிலத்திற்கேற்பத் தொழிலும் பொழுது பே க்கும் கொண்டு மகளிர் கூட்டமாகச் சுற்றித் திரிந்தாலும் பருவப் பெண் களைக் கட்டுப்படுத்தியே வந்துள்ளனர். ஒழுக் கத்தில் ஐயம் ஏற்பட்ட உடன் கட்டுப்பாடு கடுமையானதாக இருந்திருக்கின்றது. களவு நீடித்த பொழுது அம்பல் அலராகி ஊரே துாற்றி இருக்கின்றது. 3.3. களவில் ஈடுபட்ட தலைவியே கள வினே விரும்புவ தில்லே. களவு நீடித்தபொழுது ஆற்ரு மை மிகுகின்றது. நேர் முகமாகவும் மறைமுகமாகவும் உண்மையை எடுத்துக் கூறியும், படைத்து மொழிந்தும் தலைவன் வரைவினை விரைந்து மேற் கொள்ள த் தோழி வேண்டுவநற்கும் இதுவே காரணம். 34. மகளின் ஒழுக்கத்துக்குக் காப்பாளியாக விளங்கும் அன் ஆன இந் நிலை ஏற்படாமல் இருக்கவே விழைகிருள் நற்ருயும், \ 168
பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/176
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை