வானின்மேற்கு ஓடும்துன் மதியைக் குடையாக்கி மன்மதா காற்றாம்
வடக்கோடும் தேர்கொண்டாய் இதுவென்ன காலயுத்தி
மன்மதா மீனகே தனத்தினால் விஜயம் பெறலாமோ மன்மதா யார்க்கும்
விகுருதியா காதிருந்தான் மிகவும் ஜயமாமே மன்மதா
தேனார் மலரம்பால் ஆனந்த மடைகின்ருய் மன்மதா-சீறும்
திறவம்பொன் றுளதாயின் பிரமாதி யாவையே மன்மதா
மானோர் கரமுற்ற ஈசுவரன் முன்னுளின் மன்மதா-உன்னை
வாட்டிய காலையில் சாட்டும் குரோதி யல்ல மன்மதா
தெரியும்இவ் வுலகத்தில் ஏவர்கீ லகத்தினுல் மன்மதா - என்மேல்
சித்திரபா னுவைபோல மெத்தவும் காய்கின்ருய் மன்மதா
சரபோஜி மகராஜர் தமைநான் மருவச்செய் மன்மதா-நீ
குறிப்புரை:- பிரபவன்-புகழையுடையவன். பிரஜோத் பத்தி-மக்களை யுண்டாக்குதல். பரிதாபி.துன்புறுபவள். துந் துபி-முரசு. விரோதி-பகைவன். துன்மதி-கெட்ட சந்திரன் காலயுக்தி-காலத்திற்கு உரிய யுக்தி. விஜயம்-வெற்றி. விகிருதி-வேறுபாடான இயல்பு. ஜயம்-வெற்றி. பிரமாதி-மிக்க வலியையுடையவன். குரோதி-கோபமுடையவன். கீலகம்-கலகம். சித்திரபானு-அக்கினி. சருவஜித்-எல்லாவற்றையம் வெல்பவன். அக்ஷயன்-அழிவற்றவன்.
இதில் பிரபவ முதலாய பத்தொன்பது ஆண்டுகளின் பெயர்கள் தொனியில் அமைத்திருத்தல் காணலாம்.