37
மகேந்திரவர்மன் I (செ. 21):
பின் மகேந்திரவர்மன் உலகை ஆண்டான். இவன் மகேந்திரன் போன்று புகழ் படைத்தவன்; இவனுடைய ஆணையை எல்லோரும் மதித்தனர்; இவன் தன் பகைவரைப் புள்ளலூரில் அழித்தான்.
நரசிம்மவர்மன் I [செ. 22]
வெற்றி வீரன் நரசிம்மவர்மன் பிறந்தான்; இலங்கையை வென்று இராமனைக் காட்டிலும் மேம்பட்ட புகழ் பெற்றான்; செருக்கிய பகைவர் குலத்துக்குத் தூமகேது போன்றவன்; வீரத்தால் வாதாபியை வென்று (வாதாபி என்னும் அசுரனை அழித்த) அகத்தியனைப் போன்றவனாயினான்.
மகேந்திரவர்மள் II செ. 23)
இவனுடைய நீண்ட கைகள் பகைவர் கூட்டத்துக்கு இடி போன்றவை; இவன் காலமுதல் கோயில்களின் நன்மைக்காகவும் பிராமணர்க்கும் தர்ம கர்மங்கள் தொடங்கப் பெற்றுச் சிறந்தன.
பரமேஸ்வர போத வர்மன் I (செ. 24)
இவன் இச்சைப்படியே இவ்வுலக அரசர்கள் நடந்தார்கள்; இவன் பூதி (செல்வம்) உடையவன்; பூதர்க(மக்க)ளுக்குத் தலைவன்; நந்தி இலைச்சினையுடையவன்; கட்வாங்கத்தைக் கொடியில் உடையவன்; மலைபோல் வன்மையுடையவன் [பூதி (விபூதி) தரித்தவனும், பூதங்களுக்குத் தலைவனும், நந்தியை உடையவனும், கட்டுவாங்கங் கொண்டவனும், மலையில் வசிப்பவனும் ஆன சிவனுக்கு ஒப்பானவன், இவ்வரசன்.]