பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 ) ஆரணிய காண்ட ஆய்வு

ஒரு காலத்தில் மூக்கோடு முக்கு ஒத்தி முத்தம் கொடுப்பது நடந்ததாம். பின்னர், உதட்டோடு உதடு உறிஞ்சி முத்தம் கொடுக்கும் வழக்கம் ஏற்பட்டதாம். எனவே, மூக்கு முத்தம் குறைந்து பின் மறைந்ததாம். பின்னர் உதட்டு முத்தம் இன்றியமையாமை பெற்றதால், மூக்கு தேவையற்ற மிகை (Superfluity) என்று சூர்ப்பண கை கூறினாள். மற்றும், உதட்டு முத்தம் பரிமாறிக் கொள்வதற்கு முக்கு இடையூறு எனக் கருதப்படுகிறது. இதுதான் அவளது சமாளிப்பு.

முகத்தில் மூக்கு முன்னால் நீட்டிக் கொண்டிருப்பது தேவையற்ற மிகை என்று திறமையாகச் (சாமர்த்தியமாகச்) சூர்ப்பணகை சொல்லியிருப்பினும், மூக்கு இவ்வாறு இருப்பது தான் வசதியானதாகும்.

கண்களும் வாயும் உள்ளடங்கியுள்ளன. அவற்றை இயற்கையாகத் தாமே மூடிக்கொள்ளும்படிச் செய்ய வேண்டும். ஆனால், மூக்கு கண்கள் போல் உள்ளடங்கி யிருப்பின், மூக்கைப் போதுமான அளவு பாதுகாக்க முடியாது. இயற்கையாகவும் மூட வைக்க முடியாது.

மூச்சை உள்ளே இழுக்கவும் வெளியே விடவும் இப்படி யிருப்பதுதான் வசதியான அமைப்பாகும். சளி சிந்த வேண்டு மென்றால், இப்போது உள்ள அமைப்புதான் எளிதாக இருக்கும்.

தெனாலி இராமன் ஆயிரம் தலைகளை உடைய காளியைக் கேட்டதாகக் கதை சொல்லுவார்கள். என் ஒரு மூக்கு சளி பிடித்துக் கொண்டாலேயே என்னால் சிந்தி முடியவில்லையே - உனக்கு ஆயிரம் மூக்குகளிலும் சளி பிடித்துக் கொண்டால் நீ எவ்வாறு சமாளிப்பாய்? - என்று கேட்டானாம்.