பக்கம்:ஆராய்ச்சிக் கட்டுரைகள்.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் உலகுக்கு வழங்கியவை £13

வெளிவந்துள்ள அதன் தமிழாக்கத்தினின்றும் சில பகுதி களை ஈண்டுக் காணலாம்:

'மிகத் தொடக்க காலத்திலிருந்தே தமிழகத்தின் பொருள் வளங்கள் தொலைநாடுகளில் வணிகர் கவனத் தைக் கவர்ந்து வந்தன. சாலமன் ஆட்சியின்போது (கிட்டத்தட்ட கி. மு. 1000-ல்) மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை தார் ஷிஷின் கப்பல்கள் தங்கம், வெள்ளி, தந்தம், குரங்குகள், மயில்கள் ஆகியவற்றை ஏற்றிக் கொண்டு சென்றன என்று கேள்விப்படுகின்ருேம். இவை தமிழகத்திலிருந்தே சென்றனவாகல் வேண்டும். ஏனெனில், இறுதிப் பொருள்கள் இரண்டையும் குறிக்க எபிரேயமொழியின் திருதுலில் (விவிலிய நூலில்) வழங் கிய பெயர்கள் கபிம்’, ’துகிம் என்பன. இவை அன்று முதல் இன்று வரை தமிழில் வழங்கும் கவி', 'தோகை" ஆகிய தமிழ்ச் சொற்களே.

"பின்னட்களில் அராபியர்களும் கிரேக்கர்களும் இத்தமிழக வாணிகத்தைத் தொடர்ந்து நடத்தி னர். அரிசி, இஞ்சி அல்லது இஞ்சிவேர், கருவாப்பட்டை ஆகியவற்றுக்கு கிரேக்க மொழியில் வழங்கிய பேயர்கள் (ஒருசா, ஜிஞ்சிபேர். கர்ப்பியன் ஆகியவை) கிட்டத்தட்ட அவற்றின் தமிழ்ப் பெயர்களே. கிரேக்க வணிகர்கள் இப்பொருள்களுடன் இவற்றின் தமிழ்ப் பெயர்களையும் தமிழகத்திலிருந்து கொண்டுசென்று ஐரோப்பாவில் பரப் பினர்கள் என்பதை இது தெளிவாகக் காட்டுகிறது.

ಐಫೋ! ○○ في جة

'அண்மையிலே புதுவதாகக் கண்டு பிடிக்கப்பட்டு, மும்முரமாக நடந்து வருகிற பயணம் என்று குறிப்பிட்டு, பிளினி இந்தியக் கடல் வாணிகப் பயணம் பற்றிக் குறிப் பிடுகிருர். அவர் குறிப்பிடுவதாவது:

ஆ-ே