பக்கம்:ஆராய்ச்சிக் கட்டுரைகள்.pdf/173

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க்ட்டுரைக் கலை ፲83

ஆத்மாவும் சக்தியும் ஒன்று. ஆனும் பெண்ணும் சமம்.

'வேதங்களை நம்பு, அவற்றின் பொருளைத் தெரிந்து கொண்டு பின் நம்பு, புராணங்களைக் கேட்டுப் பயன டைந்துகொள். புராணங்களே வேதங்களாக நினைத்து மடமைகள் பேசி விலங்குகள்போல் நடந்துகொள்ளாதே.

"தமிழா, உனது வேலைகள் அனைத்திலுமே பெரிய கதைகள் மிதமிஞ்சிவிட்டன. உனது மதக்கொள்கைகள், லெளகிகக் கொள்கைகள், வைதிக நடை எல்லாவற்றி லுமே பொய்கள் புகுந்து தலே தூக்கி ஆட இடங் கொடுத்துவிட்டாய். இவற்றை நீக்கிவிடு. வீட்டிலும், வெளியிலும், தனிமையிலும், கூட்டத்திலும், எதிலும், எப்போதும் நேர்மையிருக்க வேண்டும்; உண்மையிருக்க வேண்டும். நீயும் பிறரை வஞ்சிக்கலாகாது; பிறரும் உன்னை வஞ்சிக்கலாகாது. பிறர் பிறரை வஞ்சிப்பதையும் நீ இயன்றவரை தடுக்கவேண்டும். எல்லாப் பேறுகளைக் காட்டிலும் உண்மைப் பேறுதான் பெருமை கொண்டது. உண்மை தவங்களுக்கெல்லாம் உயிர் உண்மை சாஸ்தி ரங்களுக்கெல்லாம் வேர். உண்மை இன்பத்திற்கு நல்லு றுதி. உண்மை பரமாத்துமாவின் கண்ணுடி. ஆதலால், தமிழா. எல்லாச் செய்திகளிலும் உண்மை நிலவும்படி செய்.

"தமிழா, எழுதிப் படிப்பதெல்லாம் மெய்யுமில்லை, எதிர் நின்று கேட்டதெல்லாம் பொய்யுமில்லை. முந்திய சாஸ்திரந்தான் மெய்; பிந்திய சாஸ்திரம் பொய்' என்று தீர்மானம் செய்துகொள்ளாதே. காலத் து க்கு ம் உண்மைக்கும் எதிரிடையாக ஒர் கணக்கு ஏற்பட்டிருக் கிறதா? தகப்பன் வெட்டிய கிணறு என்று சொல்லி மூடர்கள் உப்பு நீரைக் குடிக்கிருர்கள்!' என்று பஞ்ச தந்திரம் நகைக்கிறது.