பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/165

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

163


வாய் கோணாமல் கூறிவருவதைப் போல், ‘இந்திய மொழிகளனைத்துக்கும் தாய் சமசுக்கிருதமே என்றும் கோயில்களில் வழிபாடு செய்வதற்குரிய தெய்விகத் தன்மை கொண்டதும் அதுவே’ என்றும், ‘சமசுக்கிருதம் இறந்துபட்ட மொழியென்பது தவறானது’ என்றும், அது எல்லாரும் படிப்பதற்குக் கடினமானதென்று கூறுவதும் பிழையானது என்றும், இந்தியக் கலை, பண்பாடு இவற்றிற்கெல்லாம் அடிப்படையானது சமசுக்கிருதமே’ என்றும், ‘அதை அனைவரும் வேறுபாடில்லாமல் கற்கவேண்டும் என்றும், பலவகையாகத் தம் வாய்க்கு வந்தபடியெல்லாம், ஒன்றுமறியாத ஏழை மக்களிடமும், பார்ப்பனக் கொள்கைகளால் பலவகைக் குமுகாய, அரசியல் ஊதியங்களும் பொருளியல் நலன்களும் பெற்றுவரும் பணக்கார ஏமாளிகளிடமும் கூறிவருகின்றனர். இவற்றுக்கெல்லாம் இயைபாக, அரசுப்பதவி தாங்கும் அவ்வமைச்சர்களும் ஆளுநர்களும் அதிகாரிகளும், இந்துமத விழாக்களிலும், கோயில் குடமுழுக்குகளிலும் கலந்துகொள்வதும், பிராமணியக் கோட்பாடுகளுக்குத் தம்மை அடகுவைத்துக் கொள்வது போல், சமசுக்கிருத மொழிக்குக் கண்ணை மூடிக்கொண்டு அரசுப் பணத்தை எடுத்துக் கைத்தாராளமாகச் செலவழிப்பதும், அம்மொழி சர்ந்த இந்துமதக் கொள்கைகளுக்கும், ஆர்ப்பாட்டங்களுக்கும் அளவிறந்து வழிவிட்டு ஒதுங்குவதும், மிகவும் ஒருசார்புத் தன்மையும் கொடுமையும் வாய்ந்தன ஆகும். சமசுக்கிருத மொழி வளர்ச்சியிலும், பிராமணியப் பரப்புதலிலும், இந்துமத எழுச்சியிலும் இவ்வரசு காட்டுகின்ற தலைக்கு மீறிய அக்கறையும் ஆர்வமும், இதனை ஒரு மதவெறி பிடித்த அரசு என்றுகூடக் கருதும்படி செய்துவிடுகின்றன. இந்துமதத் தலைவர்களுக்கும் மடாதிகாரிகளுக்கும் தங்களை ஆட்டடுத்திக் கொண்டு அடிமைப்படுவது, மதச்சார்பற்ற அரசுக்குரிய இலக்கணமாக இருக்க முடியாது. இந்திரா காந்தியின் வல்லாண்மைக் காலத்தில், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் பதவியிலிருந்த ஒரு பிராமண அடிமை, காஞ்சி காமகோடி பீடத் தலைவர் தங்களுக்கு ஆட்சி முறையில் வழிகாட்ட வேண்டும் என்று வெளிப்படையாக அறிவித்த செய்தி, அரசு அதிகாரிகள் எப்படிப் பிராமணியத்திற்குத் துணைபோகிறார்கள் என்பதைத் தெளிவாக உணர்த்தும்.

பலபடியாக உயர்த்திப் பேசப்பெற்றுவரும் சமசுக்கிருத மொழியே பிராமணர்களுக்கு உயர்ந்த மொழி. அவர்கள் அதில் பேசிப் பழகி எழுத முடியாமற் போனாலும் அவர்களுக்குத் தாய்மொழியும் அதுவே! அவர்கள் தங்கள் தாய்மொழி தமிழ் என்று என்றைக்கும் வெளிப்படையாகவோ, மறைமுகமாகவோ ஒப்புக்கொண்டதே கிடையாது. அவ்வாறு ஒப்புக்கொண்டாலும் அது, அன்றைக்குள்ள