பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/184

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

182

ஆரியப் பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்


மதிப்புடைய சுடர்ப்புகைகளுக்கும் வெடிகளுக்கும் ஆசைகொண்டு உள்ளம் ஏங்கும் ஏழைமக்களுக்கு எத்துணை மனச்சலிப்பு ஏற்படும்? அம் மனவேக்கம் கொண்ட குழந்தைகளை நிறைவுசெய்யும் பொருட்டு, அவற்றின் ஏழைப்பெற்றோர்கள் படும்பாடு எத்துணைப் பெரிது! கொடியது! மேலும், பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் எத்துணை இரைச்சல் கேடுகள்! ஏத அழிவுகள்! சேத இழப்புகள்! ஏன் இந்த மூளைகெட்ட முண்ட அரசியலாளர்களுக்கு இது. விளங்கவில்லை? அல்லது, விளங்கினாலும் அவற்றைத் தடுத்து நிறுத்த ஏன் துணிவில்லை ? அடுத்த முறை முதலாளியர்களினதும், சங்கராச்சாரிக் கூட்டக் குளுவான்களினதுமான ஆதரவு கிடைக்காது என்கின்ற அச்சந்தானே! நாட்டுமக்கள் நலங்கருதாமல் அவ்வாறு அச்சப்பட்டுக் கொண்டிருக்கின்ற சுடுகாட்டுப் பதவி எதற்கு? அதற்கு ஏன் ஆளுமைக் கட்டிலில் போய் அமரவேண்டும்? ‘செயற்கரிய செய்வார் பெரியர்’ என்று திருவள்ளுவர் எழுதியது உந்து வண்டிகளில் பொறிப்பதற்குத்தானோ ? அல்லது பெரியார் நூற்றாண்டு கொண்டாடுவதற்குதானோ?

இனி, நளி(கார்த்திகை) மாதம் தொடங்கினால் போதும், ஐயப்பன் பெயரைச் சொல்லிக்கொண்டு, திருடர்களும், கொடியர்களும், கொள்ளையர்களும், அரம்பர்களும் ஆடும் ஆட்டத்திற்கு அளவே இல்லை. ஒலிபெருக்கிக்கான ஒழுங்குமுறைகள் நடைமுறையிலிருந்தும், காலை 4.30 மணிக்கே எழுந்து, ஊரே அலறும்படி ஒரேபடியான பாடல்களை 40, 45 நாட்கள் திருப்பித் திருப்பி வைப்பதால், அண்டையயலில் உள்ள பொதுவுணர்வாளர்களுக்கு எத்துணைத் தொல்லை! அக்காலம் அரையாண்டுத் தேர்வுக் காலமாகையால் அதிகாலையில் எழுந்து படிக்கும் கல்லூரி மாணவர்களுக்கும் பள்ளி மாணவர்களுக்கும் இவற்றால் எத்துணை இடையூறு! இடர்ப்பாடு! ஐயப்பா, ஐயப்பா என்று ஒலிபெருக்கி அலறுவதால் பத்திமை வளருமா? இறையருள் கிட்டுமா? அல்லது அவ்வாறு கத்திக்கமறும் அந்தக் கொண்டாட்டக் கூத்தாடிகளுக்குத்தான் நன்மை கிடைக்குமா? இவற்றுக்கெல்லாம் இறைவன் ஏமாறி இரங்கி அருள் தருவான் என்றால், அந்த இறைவனும் இவர்களைப் போல் ஒரு கொள்ளையனாகவும், கொடியவனாகவுமன்றோ இருத்தல் வேண்டும்? இஃது என்ன மூடநம்பிக்கை! ‘ஒலிபெருக்கியைத் தெருவுக்குத் தெரு, மூலைக்கு மூலை வைத்து, இசைத்தட்டுகளைப் போடுவதுதான் ஐயப்பன் திருவிழாவா? பூசையா? நோன்பா? மலைச்செலவுகளுக்கும் ‘மகா விளக்கு’ பார்ப்பதற்கும் அணியப்படுத்தும் ஊக்கவுரைகளா? அவ் வாறானால் அந்நோன்பு நோற்காதவர்களுக்கும், அம்