பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/196

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

194

ஆரியப் பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்


இனி, ‘இந்துமதம்’ என்பது என்ன? அது முழுக்க முழுக்க ஆரியப் பார்ப்பனரின் நன்மைக்காகவே, ஆரியப் பார்ப்பனரால் ஏற்படுத்தப்பட்டு, இன்றுவரை அவர்களின் வாழ்க்கைக்காக, அவர்களின் நலன்களுக்காக, மற்ற, பிற இன மக்களைக் கொஞ்சமும் இரக்கமின்றி ஆட்டிப் படைத்துக் கொண்டும், கசக்கிப் பிழிந்து வேலைவாங்கிக் கொண்டும் வரும், கொடிய மூடநம்பிக்கை கொண்ட ஒர் அமைப்பாகும். இந்த அமைப்பு ஏற்கெனவே இங்கிருந்த மக்களமைப்புகளையும் அவர்களின் கோட்பாடுகளையும் அழித்து உருமாற்றித் தன் அகன்ற நச்சுவாய்க்குள் இட்டு விழுங்கிச் செரித்து, அவற்றின் குருதியாலும் சாரங்களாலும் தன் உருவத்தைப் புதிய புதிய கவர்ச்சியாலும், காரணங்களாலும், மெருகேற்றி மிகமிக வலிவும் பொலிவும் பெற்று விளங்குகிறது. இந்துமதத்தின் கால்கள் வேதங்களில் ஊன்றியிருக்கின்றன. இதன் கைகள் மனு முதலிய பல மிருதிகளாக நெறி நூல்களாக விரிந்திருக்கின்றன. இதன் உடல் பல நூறு புராணங்களாகவும், இதிகாசங்களாகவும் பூதம் போல் பெருத்து வளர்ந்திருக்கின்றன. இதன் நச்சுப் பற்கள் இந்தியச் சட்டங்களாகவும், மதவியல் கோட்பாடுகளாகவும் உருப் பெற்றிருக்கின்றன. இதன் ஆர்ப்பாட்ட ஒலங்கள் நூற்றுக் கணக்கான விழா வேடிக்கைகளாக மக்கள் மனங்களைக் கொள்ளை கொண்டுள்ளன. இதன் நச்சுத் தன்மை பொருந்திய கவர்ச்சியான பார்வையால் மக்கள் தம் மூளைத் திரட்சிகள் உருகி நீற்றுப் போயிருக்கின்றன. எனவே, அவர்கள் இந்த இந்து சமயப் பிடியிலிருந்து தங்களை அவ்வளவு எளிதில் விடுவித்துக் கொள்ளுவதென்பது இயலாததொன்றாகவே ஆக்கப்பட்டிருக்கின்றது. இப்பிடிக்குள் அடங்காத அரசர்கள் இல்லை; இதன் கொடுமைக்கு உட்படாத மக்கள் இல்லை; இதன் கவர்ச்சி அழகில் மயங்காத மக்களினத் தலைவர்கள் இல்லை; அறிவாளிகள், வழிகாட்டிகள், பாடலாசிரியர்கள் ஒருவரும் இல்லை. இதன் பிடியிலிருந்து வெளியேறிய அத்தனைப் பேரும் அவர்கள் எவ்வளவு பெரிய அறிஞர்களாக இருந்தாலும், மக்களினத் தலைவர்களாக இருந்தாலும், வீரர்களாக இருந்தாலும், அவர்கள் ‘நாத்திகர்கள்’, ‘அரக்கர்கள்’, ‘கொடியவர்கள்’, மக்கட்பகைவர்கள் என்றுதாம் கூறப்பெற்று, அக்கால் உள்ள மதத்தலைவர்களால் அங்கேயே அழிக்கப்பட்டுள்ளார்கள்.

இப்படிப்பட்ட இந்துமதத்தை ஒழுக்கங்கெட்ட, குடிவெறி நிறைந்த மூடர்களைத் தவிர வேறு எவரும் ‘அர்த்த’முள்ளது என்று சொல்ல மாட்டார்கள். அப்படி அவர்கள் சொல்வார்களானால் அதற்கு