பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/211

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
மூட நம்பிக்கைக்கு ஆதரவு தரும் எந்தச் செயலும் பார்ப்பனியத்தை வளர்ப்பதே!

“ ‘விளக்கு வரிசை’ (தீபாவளி) விழா நாடெங்கும் பரவலாகக் கொண்டாடப்பெற்றது” - என்று வழக்கம் போல, பார்ப்பன வானொலி, தொலைக்காட்சி இரண்டும் வாய் கிழியப் பீற்றிக் கொண்டன. ஊரைக் கெடுத்து, ஏழை மக்களின் பணத்தை உறிஞ்சி வாழும் செய்தித் தாள்களும் பக்கந்தோறும் நடிக நடிகையரின் படங்களொடும், அவர்கள் பெயர்களோடு வெளியிட்ட கட்டுரைகளொடும் வெட்கங்கெட்ட முறையில் மலர்கள் வெளியிட்டு, ஊதியங்களை வாரிக் கொட்டிக் கொண்டன. மொத்தத்தில் மக்களிடையில் மூடநம்பிக்கைகளை வளர்த்துச் செழிக்க வைப்பதில், இந்த நாட்டு முதலாளிகளுக்கும் அவர்களின் அடிமைகளான பார்ப்பனீயப் பாதந் தாங்கிகளுக்கும் மிகுந்த அக்கறை உண்டு.

‘தீபாவளி’க் கொண்டாட்டம் முழுவதும் மூடநம்பிக்கையை அடிப்படையாகக் கொண்ட விழா, மொத்தத்தில் இந்த நாட்டில் கொண்டாடப்பெறும் பொங்கல் விழாவைத் தவிர்த்த பிற அனைத்து விழாக்களும் மூட நம்பிக்கைகளை அடிப்படையாக வைத்தே கொண்டாடப் பெறுகின்றன. அத்தனை விழாக்களும் பார்ப்பனியத்தை வளர்க்கும் ஆரியச் சேறு நிறைந்தவையே! அறிவியல் அல்லது குமுகாயவியல் தொடர்பான எந்த ஒரு