பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/260

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

258

ஆரியப் பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்


நினைக்கிறார்கள் என்று இவர் போய் அளந்து பார்த்துக் கண்டுபிடித்தார் என்றால், இவர் கண்களுக்குப் பட்ட அம் மக்கள் இவர் இனத்துக்குப் பிறந்த இன இரண்டர்களாகத்தான் இருப்பார்கள் என்பதில் ஐயமிருக்க முடியாது.

"கருணாநிதி இந்தியெதிர்ப்புப் போராட்டத்தை அறிவித்தவுடன் மக்களிடையே அது பெரிய தாக்கத்தை (பாதிப்பை) ஏற்படுத்தவில்லை” என்கிறார் சோ. ‘பாதிப்பு’ என்பதை உணர என்ன அடையாளம் வைத்திருக்கிறார் என்பதைத் தெரிவிப்பாரா, சோ? ஒரு வேளை இவர் மொட்டை மண்டையில் கல் ஏதும் விழவில்லையே, என்பதைக் கருதி அவ்வாறு கூறியிருக்கலாம் என்று கருத வேண்டியிருக்கிறது. அப்படிப்பட்ட நிலை வர நெடு நாள்களாகா என்பதைச் சோவுக்கும் அவரைச் சேர்ந்தவர்களுக்கும் நேரடியாகவே எச்சரித்துக் கூறக் கடமைப்பட்டிருக்கிறோம்.

மற்றும் இவரின் அந்த ஆசிரியவுரைக் கட்டுரையில் அவர் குறிப்பிட்டிருப்பவை அனைத்தும் இவர் திருகல் மூளையில் மடடுமே தோன்றுகின்ற கருத்துகள்தாம்.

‘போராட்டம் நடைபெற்ற போதும், மக்கள் மனத்தில் தி.மு.க.வின்ர் உயர்ந்துவிடவில்லை. அக் கட்சித் தலைவர்கள் தளைப்பட்ட கைதான) போதும், அவர்கள் ஈகம் (தியாகம்) செய்ததாகக் கருத்து (அபிப்ராயம்) வேரூன்றி விடவில்லை - என்கிறார் சோ. இவருடைய மொட்டை மண்டைக்கு மட்டும் எப்படித்தான் மக்களின் கருத்து ‘பளிச் பளிச்’சென்று பட்டு விடுகிறதோ, நமக்குத் தெரியவில்லை. ஒருவேளை மக்களெல்லாரும் இப்படித்தான் இருக்கவேண்டும், இருந்தால்தான் இவர் இனத்துக்கு நல்லது என்று நினைக்கிறாரோ, தெரியவில்லை.

இப்படியாக இவர் கலைஞரைப் பற்றி வெளிப்படுத்தும் கருத்து, இவர் மொழுக்கட்டை மண்டையில் தோன்றிய ஒரு கொம்பு என்றால், இதே வகையில் இதே மண்டையில் தோன்றிய இன்னொரு வகையான கொம்பையும் பாருங்களேன்.

“அவர்களைத் தளை(கைது) செய்ததை வைத்து, தமிழக முதல்வர் சட்டம், ஒழுங்கைக் காப்பதற்காக நிரம்பவும் உறுதியான நடவடிக்கை எடுத்து விட்டதாகவும் யாரும் நினைத்ததாகத் தெரியவில்லை. தளைகளை(கைதுகளை) யொட்டி ஆங்காங்கே சில வன்முறை, நிகழ்ச்சிகள் (சம்பவங்கள்) நடத்தப்பட்டபோது, அதை ‘மக்கள் கொந்தளிப்பாக’ நினைத்து யாரும் ஏமாறிவிடவும்