இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
இராமாயண ஒளிபரப்பு நோக்கம் தமிழின வெறுப்பை வளர்ப்பதே!
இராவணன் வழியாகத் தமிழினத்தை அவமானப்படுத்துகின்றனர்!கடந்த ஆறு மாதங்களுக்கு மேல் தில்லித் தொலைக்காட்சியின் ஒளிபரப்பில், இராமாயணம் ஒளிபரப்பாகி வருவதை அனைவரும் அறிவர்!
இலங்கையில் விடுதலைப் போர் தொடங்கியுள்ள இந்த நேரத்தில், திட்டமிட்டுத் தில்லி ஆட்சியால் இராமாயண ஒளிபரப்பு நடந்துவருவது, தமிழினத்தின் வலிவைப் பழங்கதைகளைக் காட்டி ஒடுக்குவதற்கே உதவும் என்பதை, அதன் கதைப் போக்கையும் உரையாடல்களையும் நிகழ்ச்சிகளையும் கூர்ந்து கவனித்துப் பார்த்தால் அனைவரும் உணர முடியும்.
உரையாடல்களுக்கு நடுநடுவே ஆரிய - திராவிட இனவுணர்வுகள் தூண்டப்படுவதை அனைவரும் அறியலாம். தமிழினத்தை இழிவுபடுத்தும், கோழைமை வாய்ந்ததாகக் காட்டும் காட்சிகளும்