பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/269

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

267


போன்றது! அதன் வேர், அடிமரம், கிளைகள், இலைகள், பூக்கள், பிஞ்சுகள், காய்கள், கனிகள், கொட்டைகள், பருப்புகள், இன்னும் அது வெளிப்படுத்தும் மணம், அதைத் தழுவி வெளிவரும்காற்று - என்று இவ்வாறு அனைத்தும் நச்சுத்தன்மை கொண்டவையே! இதை இந்து மதச் சார்புள்ள அல்லது சார்பற்ற எந்தக் கொம்பனாலும் பொய் - தவறு என்று கூறிவிட முடியாது; கூறி மெய்ப்பித்துவிட முடியாது. ஏனெனில் அதுபற்றிய அத்தனை உண்மைகள் அடிப்படைகளாக - அடை அடையாக உள்ளன.

இந்த நிலையில், யார் எந்த வகையான அரசியல், பொருளியல், மொழியியல், கலை, பண்பாட்டியல் முயற்சியைச் செய்தாலும், அதைப் பார்ப்பனியத்தை எதிர்த்துக் கொண்டுதான் செய்ய வேண்டியுள்ளது. அதற்குப் பார்ப்பனீயம் முழுவதும் தன் முழு மூச்சுடன் எதிர்ப்புக் காட்டித்தான் ஆகும். அவ்வெதிர்ப்பை எதிர்கொள்வது மிகவும் கடினமான ஒன்றாகவே இருக்கிறது. காரணம் இந்தியாவைப் பொறுத்தமட்டில், மக்கள் தொடர்புடைய அத்தனை ஆற்றல்களும் பார்ப்பனியத்தின் கைகளிலேயே உள்ளன. அதற்குத் துணையாக வலிவான ஆற்றலாக இருப்பதுதான் இந்து மதம். எனவே இந்துமதத்தை எதிர்த்துக்கொண்டு என்ன பணி - தொண்டு - செய்தாலும், அது இதுவரை வெற்றிபெற முடியாததாகவே உள்ளது. ஆகவே இந்துமதம் என்னும் அடிப்படை வலிவை நாம் அடியோடு தகர்த்தெறிந்தால் தவிர, எந்தக் கோணத்திலான நம் எந்த முயற்சியும் வெற்றிபெற முடியாததாகவே இருக்கும்.

இந்நிலைக்கு ஒரே ஓர் எடுத்துக்காட்டு போதும். அண்மையில் அரும்பாடுபட்டுக் கடந்த நாற்பது ஆண்டுகளாக இந்திய அரசியலில் தன் கால்களை மிகவும் ஆழமாக - அகலமாகப் - பரப்பிக்கொண்டு வேரூன்றியிருந்த ஒரு பார்ப்பனக் குடும்பத்தின் வல்லாளுமையை அகற்றிவிட்டுச் சனதாதளம் தான் அமைத்த தேசியக் கூட்டணி ஆட்சியில் கால் வைத்தது, நடுவணரசில் ஏற்பட்ட இந்த மாறுதலைப் போல் வேறு சில மாநிலங்களிலும் குறிப்பாகத் தமிழ்நாட்டிலும் அப் பார்ப்பனிய ஆட்சிக்கு மாறான என்று சொல்ல முடியாவிட்டாலும், இசைவில்லாத ஆட்சி நடந்து வரலானது. இருப்பினும் இவ்வாட்சி மாற்றங்களுக்குங்கூட, முழு அளவில் இல்லையென்றாலும், பெரும் அளவிற்குப் பார்ப்பனியம் துணைநிற்க வேண்டியிருந்தது. இந்த நிலைதான் இந்தியாவில் உள்ள எந்த மாநிலத்தின் நிலையும்; நடுவணரசின் நிலையும்.