பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/285

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

283


நிலைநிறுத்திக் கொள்வதிலும் எவ்வளவு விழிப்பாக, கவனமாக, முன்னெச்சரிக்கையாக இருந்துகொண்டு இருக்கிறார்கள் என்பதற்குரிய தக்க சான்றுகளாகும்.

தமிழகத்தில் செயலலிதா ஆட்சிக்கு வந்த நாளிலிருந்தே பார்ப்பனியத்திற்குப் பல்வகையான ஆக்கங்கள் செயல்படத் தொடங்கிவிட்டன. வானொலி, தொலைக்காட்சியில் உள்ள பார்ப்பனர்கள் அனைவரும் தங்களுடைய சொந்த சொத்துகளைப் போலவே அவற்றைக் கையாளத் தொடங்கி விட்டனர்.

நாடகமா, உரையாடலா, ஆடலா, பாடலா. கருத்துரைகளா, திறனாய்வுகளா, உழவுச் செய்திகளா, விழாக்களா, வேடிக்கைகளா, விளயைாட்டுகளா, விளம்பரங்களா - எதுவென்றாலும் அனைத்திலும் பார்ப்பனச்சேரித் தமிழ்வழக்கும், குடுமி, பூனூல், திருநீறு, நாமம் அணிந்த வெற்றுடம்பு ஆடவர்களும் மடிசார் மாமிகளும், பார்ப்பனக் குஞ்சு குளுவான்களுமே நிறைந்த காட்சிகளுந்தாம் - தொலைக்காட்சியில் காட்டப்படுகின்றன. கதைகளர் அவர்ள் கதைகள்தாம்! பாடல்களா தியாகராசர் இராமதாசர், பாபநாசன் சிவன் ஆகியவர்களுடையவைதாம்! ஆடல்களா பத்மா சுப்பிரமணியம் குழுமங்கள்தாம்; கூட்டங்கள்தாம்! இவ்வாறு பார்ப்பனியத் தனமான கலைகள், காட்சிகள்தாம் தமிழில் உள்ளன என்பது போன்ற கூத்தடிப்புகள்! ஒட்டுமொத்தமாகச் சொல்வதானால், பார்ப்பனர்கள்தாம் தமிழ்நாட்டில் உள்ளனர் என்பது போன்ற மயக்கத்தையே தொலைக்காட்சியிலும் வானொலியிலும் உருவாக்கி வருகின்றனர். இவற்றுள் நாட்டுப்புற - அஃதாவது அவர்கள் கருத்தில் சொல்வதானால் - தாழ்த்தப்பட்ட - தமிழிய - சூத்திரக் கலைகள் என்னும் தலைப்பில் - தாரை, தப்பட்டை, உருமி, மேளம், கரகாட்டம், காவடியாட்டம், பொய்க்கால் குதிரை யாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், தெருக்கூத்து - ஆகியவற்றில்தான் தமிழ்மக்கள் சிற்றூர்ப்புற மக்கள் காட்டப்படுகின்றனர். பார்ப்பனர்கள் இத் தாழ்த்தப்பட்ட கலைகளில் தலைகாட்டுவதே யில்லை, இவற்றில்தாம் தெம்மாங்கு, சிந்து முதலிய பழந்தமிழிசைகள் பயன்படுத்தப்படுகின்றன. இவை யெல்லாம் முன்பே ஒருவகையில் இருந்தன. எனினும், செயலலிதா ஆட்சிக்கு வந்த பின்னர் நிலைகள் வானளவுக்கு மேலோங்கிக் கொடிக் கட்டிப் பறக்கின்றன.

இவை தவிர, செயலலிதாவின் போலித்தனமான, கோமாளித்தனமான, சிறுபிள்ளைத்தனமான அரசியல், பொய்யான உறுதிமொழிகள், ஏமாற்றுத்தனமான திட்டங்கள், (பணமே