பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/72

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

70

ஆரியப் பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்


சூத்திரரை அரசன் தம்தம் தொழில்களையே தொடர்ந்து, விடாமல் செய்து வரும்படி கட்டாயப்படுத்தி வேலை வாங்கவேண்டுமென்றும், இல்லையெனில் வேலையற்ற இவர்கள் உலகத்தையே அழித்து விடுவார்களென்றும், அரசன் பிராமணர்களைக் கொண்டே வரவு செலவு எழுதல், கருவூலப் பொருள்களை மேற்பார்வையிடுதல் முதலிய வேலைகளைச் செய்ய வேண்டுமென்றும், பிராமணனைப் போல் பூணூல், குறிகள் முதலியவற்றை அணிந்துகொள்ளும் நான்காம் இனத்தவரின் உறுப்புகளைக் குறைத்தல் அரசன் கடமை யென்றும், அரசனின் கருவூலமே கொள்ளை போனாலும் பிராமணர்களுக்குத் தீங்கு செய்யக் கூடாதென்றும், இவ்வுலகத்தில் தீ சுடுவதும், கடல் நீர் உவர்ப்பதும், நிலவு தேய்ந்து வளர்வதும், உலகங்கள் இயங்குவதும், மாந்தர்கள் படைக்கப் பெறுவதும், வேதங்கள் ஒதப்பெறுவதும் பிராமணர்களாலேயே என்றும், எனவே அவர்களுக்குச் சினம் வரும்படி அரசன் நடந்துகொள்ளக்கூடாதென்றும், பிராமணன் உடலிலிருந்தே அரசன் (க்ஷத்திரியன்) உண்டாக்கப் பெற்றனாகையால் பிராமணரை அரசர்கள் காக்க வேண்டியதே கடமையென்றும், இவ்விருவரே உலகிலுள்ள இன்பங்களை யெல்லாம் நுகரத்தக்கவர் என்றும், மன்னன் தன் இறுதிக் காலத்தில் தன்னிடம் மிகுந்திருக்கும் பொருள்களைப் பிராமணர்களுக்கும் அரசைத் தன் பிள்ளைகளுக்குமே விட்டுச் செல்ல வேண்டுமென்றும், உள்ளும் புறமும் கவடின்றி, மேலினத்தாரைத் தாழ்த்திச் சொல்லாமல், அவர்களுக்குத் தம் வாழ்க்கை முழுவதும் மேலான அடிமையாயிருந்து மன மகிழ்ச்சி யுடையவனே முதல் தரமான ‘சூத்திரன்’ என்றும், இனக்கலப்பே அறத்துக்குக் கேடு என்றும், நான்காம் இனத்தவர் பேசும் அத்தனை மொழிகளும் ‘மிலேச்ச’ மொழிகளே என்றும், சமற்கிருதமே தேவமொழி என்றும், சூத்திரர்கள் ஒரோவொருகால் சமற்கிருதத்தைக் கற்றுக்கொண்டாலும் அவர்கள் அடிமைகளாகவும் திருடர்களாகவுமே ஆவார்கள் என்றும், இவர்களனைவரும் ஊருக்கு வெளியிலும், மரத்தடிகளிலும், தோப்பு துரவுகளிலும், இடுகாடு சுடுகாடுகளிலும், மலைமடுவுகளிலுமே வாழ்ந்திருக்க வேண்டுமென்றும், இவர்கள் எந்த வகையான மாழை(உலோக) ஏனங்களிலும் புழங்கக் கூடாதென்றும், இவர்கள் உண்ணுவதற்கு உடைந்த சட்டிகளையே வைத்துக் கொள்ளுதல் வேண்டுமென்றும், பிணங்களுக்கு இடுகிற துணி வகைகளையே இடுப்புவரையில் அணிய வேண்டுமென்றும், பொன், வெள்ளிகளை நகைகளாக இவர்கள் அணியக் கூடாதென்றும், இரும்பு, பித்தளைகளாலான