பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/89

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

87


மட்டும் பேசிக்கொண்டு தொடைதட்டித் திரியும் தமிழர்கள் ஒருவேளை படைதிரட்டிப் போனாலும், அப்படையில் ஆரியப் பார்ப்பனரின் சாணக்கியத்தனத்திற்கு இடங்கொடுக்கவே கூடாது என்பதே தமிழர்களுக்கு நாம் விடும் எச்சரிக்கை.

அண்மையில் புதுத்தில்லியில் நடந்த தன்னுரிமைக் கட்சி மாநாட்டில் திரு. இராசாசி அவர்கள், “தன்னுரிமை(சுதந்திரா)க் கட்சியினர் பொறுமையுடன் பேராயக் கட்சியின் கொடுங்கோல் ஆட்சியையும் ஊழலையும் எதிர்த்துப் போராட வேண்டும். இந்தப் போராட்டத்தை ஓர் அறவழியான போராட்டமாகவும், சமயக் கடமையாகவும் கருதுதல் வேண்டும். இஃது எனக்கு ஒரு கட்சியின் அரசியல் போராட்டம் அன்று; அறவழிப் போராட்டமே”. (அதாவது தர்ம, தார்மீக, மதப் போராட்டமே) என்றும், சென்னையில் நடந்த அவர் பிறந்த நாள் கூட்டத்தில், “பேராயக் கட்சியைக் கவிழ்ப்பதும் நல்ல ஆட்சியை ஏற்படுத்துவதும் ஆகிய இரண்டு நிகழ்ச்சிகள் நடக்கவே வேண்டும்” என்றும் குறிப்பிட்டுள்ளார். முன்குறிப்பில் அவர் நடத்துவது ஒரு கட்சியினர் அரசியல் போராட்டம் அன்று என்ற குறிப்பிற்கு, இராசாசியின் அகர முதலியில் ‘ஒர் இனத்தின் தன்னுரிமைப் போராட்டம்’ என்றே பொருள். அந்த இனம் பார்ப்பன இனமே! அடுத்து, இரண்டாவது குறிப்பில் உள்ள ‘நல்ல ஆட்சியை ஏற்படுத்துவது’ என்னும் கூற்றுக்குப் பார்ப்பன ஆட்சியை ஏற்படுத்துவது என்பதே. மற்றபடி அவருடன் சேர்ந்துள்ள கட்சிகள் யாவும் அது தான், தானே என்று எண்ணி இறுமாப்பதில் பொருளில்லை. பார்ப்பனர் இந்தியா முழுவதும் - ஏன் உலகம் முழுவதுமே உள்ளனர். வேறு வேறு மொழிகள் பேசிக் கொண்டும் வேறு வேறு உடைகள் உடுத்துக்கொண்டும், வேறு வேறு கொள்கைகளை கூறிக் கொண்டும் இருந்தாலும் அவர்களின் உள்நோக்கமெல்லாம் பிறரைத் தங்கள் காலடிகளில் கிடத்திக் கொள்ள வேண்டும் என்பதே! இங்கு வந்து ஒரு பார்ப்பான் தமிழ் சமற்கிருதத்திலிருந்து தோன்றியதென்பான். உருசியாவுக்குப் போய் ஒரு பார்ப்பான் உருசிய மொழியில் சமற்கிருதச் சொற்களும் இருக்கின்றன பார்த்தீர்களா? என்பான். இப்படி உலகமெங்கும் பரவி, வாய்ப்புக் கிடைத்தவிடங்களிலெல்லாம் தங்கள் வால்களை ஆட்டிக் காட்டும் இனம் பார்ப்பன இனம், திரு. இராசாசி அந்த இனத்தின் தனிப் பெருந்தலைவர். அவர் பேச்சுகளையும் உளக் குறிப்புகளையும் உலகெங்கணும் எடுத்துச் செல்லப் பல்லாயிரக்கணக்கான வாய்ப்பு வகைகளை அவர்களே உண்டாக்கிக் கொண்டுள்ளனர். அவ் வினத்தால் உலகில் ஏற்பட்ட மாறுதல்களோ எண்ணிலடங்காதவை யாகும். வீழ்ந்த அரசுகள் பல! வீழ்த்தப் பெற்ற பேரரசர்கள்