பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/93

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

91


அவ்வொழுக்கங்களில் சிறிதும் வழுவாது நடைபெற வேண்டும் என்பதற்காகவே காஞ்சிமுதல் காசி வரையுள்ள நூற்றுக் கணக்கான சமய 'பீடங்களும்' மடங்களும், அவற்றின் வெறிபிடித்த தலைமைகளும், அவற்றிற்குரிய கோடிக் கணக்கான சொத்துகளைக் கொண்டும், பொண் வெள்ளி முதலிய மதிப்புள்ள நகைநட்டுகளைக் கொண்டும் ஆயிரக்கணக்கான வேலி விளைச்சல் நிலங்களைக் கொண்டும் வேலை செய்தும், காப்பாற்றியும் வருகின்றனர். இவையும் போதாவென்றும் இராசாசி முதலிய அரசியல் தலைவர்களும் தங்களால் முடிந்த ஆற்றல்களை முழுவதும் பயன்படுத்தி, அவர்தம் குலங்களுளம் கூறுபாடுகளும் மயிரிழையும் பிறழாது நடைபெற நேரடியாகவும் மறைமுகமாகவும் பல்வகையாகப் பொருளாலும் அதிகாரத்தாலும்.துணையாக நின்று வருகின்றனர். இவற்றின் பயனாக இவர்கள் எண்ணியது எண்ணியபடி இயங்கவும் இயக்கவும் போதுமான வலிமை மிக்க செய்தித் தாள்கள் இயங்குகின்றன. நீங்கள் படிக்கின்ற இத் ‘தென்மொழி’ ஏட்டை அச்சிடுகின்ற பொறியின் விலை மதிப்பைப்போல் ஏறத்தாழ 2000 மடங்கு விலைமதிப்பும் ஆற்றல் வாய்ந்ததுமான பொறிகளாலேயே, பார்ப்பனர்களின் Indian Express, Mail, தினமணி, மித்திரன் முதலிய நூற்றுக்கணக்கான செய்தித்தாள்களும், கல்கி, ஆனந்த விகடன் முதலிய ஆயிரக்கணக்கான கிழமை, மாத இதழ்களும் அச்சிடப்பெற்று வெளிவருகின்றன என்று நீங்கள் உணர்ந்துகொள்ளுதல் வேண்டும். இவற்றுடன் நெய்வேலி, உயிர்முறிக் குழும்பு(L.I.C.) வானொலி முதலிய ஆயிரக்கணக்கான அரசினர் தொழிலகங்களிலும், பிற தனியார் தொழிலகங்களிலும் நூற்றுக்கு 70, 80 புழுக்காடு பார்ப்பனர்களே நீக்கமற நிறைந்துள்ளனர். இவையுமன்றி எங்கெங்குத் தமிழர் திறமையுடன் செயல்படுகின்றனரோ, அவ்விடங்களிலெல்லாம் பார்ப்பனப் பெண்டிர்களும், மேலாளர்களும் திறமையுடன் ஊடுருவல் செய்து அவர்தம் வல்லாண்மைத் திறத்திற்கும் செயற்பாட்டிற்கும் நிலையான தடையிட்டு வருகின்றனர். பெரும் புகழ்பெற்ற புதின ஆசிரியர் ஒருவர் தம்பால், அழகும் இளமையும், கல்வித்திறமும் வாய்ந்த பார்ப்பனக் கன்னிப் பெண் ஒருத்தியை, அவருக்குத் துணையாக மாத இதழ் நடத்தும் பார்ப்பனக் கூட்டம் ஒன்று அனுப்பி வைத்ததும், அப்பெண் அவருக்கே இரண்டாம் மனைவியாக அமர்ந்துகொண்டு அவர் எழுதிவரும் நூல்களிலெல்லாம் கருத்துகளிலெல்லாம் தன் இனத்தின் திருவேலைகளைச் செய்து கொண்டிருப்பதையும், அவ்வடிப்படையில் இயங்கும் தமிழ் எழுத்தாளர் பலர் அறியார்.