பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/96

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

94

ஆரியப் பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்

இவற்றை யெல்லாம் 2000 கற்களுக்கு அப்பால் உள்ள “இந்திய அரசியலில் அக்கறையும் இந்தியர் முன்னேற்றத்தில் நாட்டமும் கொண்ட ஓரிரு நடுநிலையான அமைச்சர்கள் கண்டுகொள்வார்கள் என்றோ, அக்கறை கொண்டு போக்கி விடுவார்கள் என்றோ இங்குள்ள தமிழர்கள் நம்பிக்கை கொள்ளமுடியாது. இவற்றை அரசியல் சட்டத்தாலேயே ஒன்றும் செய்துவிட முடியாது. மவத்தைக் கத்திகொண்டு அகற்றிவிட முடியாது. பார்பயனர்களால் வெட்டப்படும் படுகுழிகளையே தூர்த்து முன்னேறிப் போகமுடியாத தமிழர்கள், இப்படிப்பட்ட தமிழ்க் குமுகாயக் கேடர்களால் போடப்படும் தடைக் கற்களை அகற்ற முடியாமல் திணறிக் கொண்டுள்ளதை உண்மைத் தமிழன்பர் உணரவேண்டும்.

இவ்வாறு தமிழர் இனமே வடவராலும், பார்ப்பனராலும் தமிழ்க் கழிசடைக் கயவர்களாலும் சீரழிக்கப்பட்டு வரும் ஒரு நிலையை யாரிடம் போய்க் சொல்லி அழுவது? அரசியல் சார்பில் வடவனிடமே போய் உரிமை கேட்டு அழவேண்டியுள்ளது; குமுகாய அளவில் பார்ப்பனர்களிடமே போய்ச் சாதியை ஒழி, சமயத்தைச் சமப்படுத்து என்று அவன் உச்சிக்குடுமியையும் பூணுரலையும் பிடித்துத் தொங்கித் தொலைக்க வேண்டியுள்ளது. ஏதாவது எழுதவோ எழுதுகின்ற கருத்து விளம்பரம் பெறவோ வேண்டியிருப்பின் தினத்தந்திக் கூட்டங்களிடமே போய்க் கால்பிடிக்க வேண்டியுள்ளது. இந்நிலையில் எந்த அரசியல், பொருளியல், குமுகாயவியல் அறிஞனும் எந்தக் கருத்தையும், உண்மையையும் எடுத்துச் சொல்லி எதனையும் செய்துவிட முடியாதபடி தமிழ்க் குமுகாயமே இருண்டு கொண்டுள்ளது.

ஆகவே இருண்டுள்ள இத்தமிழர் தம் உள்ளங்களில் தன்மான உணர்வை எழுப்ப எங்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டிய கட்டாய நிலைக்கு நாங்கள்'தள்ளப்பட்டு விட்டோம். அதற்கு ஒரே முடிவு இது தான். தமிழர்கள் எல்லாத் துறைகளிலும் நசுக்கப்பட்டும், ஒடுக்கப்பட்டும், சிதைக்கப்பட்டும், ஒழிக்கப்பட்டும் வருகின்றனர். இதைத் தடுத்து நிறுத்தியே ஆகல்வேண்டும். அதற்கு இந்திய அரசின் இணங்கிய தேசிய வுணர்வு தோதாய் அமையவில்லை. ஒருவேளை இப்படிப்பட்ட இந்திய ஒருமைப்பாட்டை உருசியனோ, அமெரிக்கனோ, சீனனோ வந்து அமைத்தால்தான் சரிவர அமையுமோ தெரியவில்லை. பூனைகள் என்றைக்கும் எலிகளுக்குத் தலைவர்களாக முடியாது. பாம்புகள் என்றைக்கும் தவளைகளுக்கு வழிகாட்டிவிட முடியாது. கோடரிக்காம்புகள் என்றும் அரியப்படும் கோடுகளையும்,