பக்கம்:ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

104

தமிழர் பண்பாடு


‘கடலின் நுழைவிடத்தில் இடம்பெற்ற டைரஸ் என்ற வாணிக நிலையத்தில் (Ezekil. XVII.19) பளிச்சிடும் இரும்பு, தரம் தாழ்ந்த லவங்கப்பட்டை , மருந்தாகப் பயன்படும் மணம் தரும் ஒருவகைப்புல் ஆகிய பொருள்கள் இருந்தன. (இந்திய இரும்பைக் காய்ச்சிப் பக்குவப்படுத்துவது குறித்த கிரேக்க நாட்டுத் தனி ஒப்பந்தம், பிற்காலத்தில் உருவாயிற்று என்கிறது, திருவாளர், வார்மிங்டனின், ‘'இந்தியாவுக்கும் உரோமப் பேரரசுக்குமிடையிலான வாணிகம்” என்ற நூல். (Commerce between the Roman Empire and India - by Warmington. page:258): பளிச்சிடும் இந்திய எஃகு, பழைய காலத்தில், பல்வேறு நாடுகளால், போர்வாட்கள் பண்ணுவதற்காக இறக்குமதி செய்யப்பட்டது, இலவங்கப்பட்டையின் பழைய பெயர் காஸியா (Cassia) என்பதாம். நறுமணம் கமழும் ஒரு வகைப் புல்லின் பெயர் கலமஸ் (Calamus) என்பதாம்.

நறுமணப் பொருள்கள், ரத்தினக் கற்கள், பொன் ஆகிய பொருட்களைப் போலவே, இப்பொருட்களும் ஷீபா {Sheba) அரசியாரின் வணிகர்களால் இந்தியாவிலிருந்து டயரஸுக்கு Tyrus) எடுத்துச் செல்லப்பட்டன. (ஏழெகில் - 17:22)

கி.மு. 704 - 681ல் ஆட்சி புரிந்திருந்த சென்ன செரிப் (Sennacherib) என்ற அரசன், நிலவே (Ninevch) என்ற நகரை விரிவுபடுத்தி, அதில் தனக்காக ஓர் அரண்மனையைக் கட்டி, ஓர் பெரிய மலர்த்தோட்டத்தையும் எழுப்பி, அத்தோட்டத்தில் ஏனைய மரங்களோடு, இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்து, ஆட்டுமயிர் விளையும் மரங்களையும் (250 ஆண்டுகட்டுப் பிறகு, ஹிரோடோடஸ் (Herodotus) அவர்களால் பருத்திச் செடியைக் குறிக்க வழங்கப்பட்ட ஒரு தொடர்) பயிரிட்டான், (Journal of the Royal Asiatic Society. 1910 page: 403 Pinches.)

‘'இந்திய முன்னோர்கள், உயிரினங்கள் கடல் வழியாகப் பாரசீக வளைகுடாப் பகுதிக்கும், ஆப்பிரிக்க, சீன நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்தனர். (J.R.A.S. 1920 Page: 147) வண்டிகளை ஈர்க்கவும், பொதிகளைச் சுமக்கவும், ஊர்ந்து சல்லவும் பயன்படுத்தப்பட்ட, முதுகில் திமில் உடைய