பக்கம்:ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழர் வாழ்க்கை கி.மு. 500 முதல் கி.பி. 1 வரை

157



"மன்ற எருமை மலர்தலைக் காரான்
இன்தீம் பால் பயம் கொண்மார், கன்றுவிட்டு
ஊர்க்குரு மாக்கள் மேற்கொண்டு கழியும்
பெரும்புலவர் விடியல்"
              நற்றிணை : 80 :1-4


கடல் சார்ந்த நிலத்தில் :

கடல் சார்ந்த நிலத்தைச் சேர்ந்த இளமகளிர் நாள்தோறும் முறையாக மேற்கொள்ளும் வாழ்க்கை முறை, அப்பெண்களின் தோழி பாடிய இந்தப் பாட்டிலிருந்து நன்கு தெரியவரும்.

தோழி! நீ வாழ்வாயாக! பெரிய உப்பங்கழிகளில் உள்ள மீன்களாகிய இரையைத் தின்ற பல்வேறு இனப்பறவைகளின் வரிசை வரிசையான கூட்டம், வளைந்த பனைமடல்களிடையே கட்டிய குடம்பைகளில் அடங்கி இராப்பொழுதை நெருங்கியிருந்து கழிக்கும். அப்பனை மரங்கள் வானளாவ உயர்ந்து நிற்கும், வெண்மணல் பரந்த கொல்லை கள் சூழ்ந்த கானலிடத்துக்கு உன் தோழி மாரோடு, காலைப் பொழுதிலேயே சென்று, தேன் துளிக்கும், மணம் கமழும் மலர்களை உடைய நெய்தலின், ஒன்றோடொன்று மாறுபடும் உருவம் வாய்ந்த இலைகளைப் பறித்துக் கொணர்ந்து ஆடையாகத் தைத்து அதை உடுத்துக் கொண்டு, சிற்றில் புனைந்து, அது சிறக்கக் கோலமும் இட்டு மகிழ்ந்து விளை யாடி, புலால் நாறும் அலைகளால் மோதுற்று மோதுற்று வளைந்து போன அடியை உடைய கண்டல் மரத்து வேர்களின் இடையே, இணை இணையாகச் செல்லும் சிவந்த நண்டுக் கூட்டங்களின் நடை அழகைக் கண்டு மகிழும், இவைபோலும் சிறுசிறு விளையாடல்களையும் கைவிட்டுப் பெரிதும் வருந்திக் கிடக்கின்றனையே உனக்கு வந்துற்ற , அத்துயருக்கு யாதுதான் காரணம்? கூறாய்தோழி!"

உரையாய்; வாழி! தோழி! இருங்கழி
இரையார் குருகின் நிரைபறைத் தொழுதி,
வாங்குமடல் குடம்பைத், தூங்கிருள் துவன்றும்