பக்கம்:ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு.pdf/179

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


வெளிநாட்டு வாணிகம் கி.மு. 600 முதல் கி.பி. 14 வரை

தாரியஸ் ஆட்சியில்

கி.மு. 606-ல் அஸ்ஸிரியப் பேரரசு கவிழ்க்கப்பட்டது. அது நிகழ்ந்ததும், பாபிலோன், ஆசிய வாணிகத் தலைமையிடமாக ஆகிவிட்டது. யவனர், யூதர் பொய்னீஷியர், இந்தியர், சீனர், என்ற உலக வணிக இனங்கள், தங்கள் வணிகப் பண்டங்களைப் , பாபிலோனிய சந்தைகளுக்கு எடுத்துச் சென்றன. ‘அயெஸ் செய்லஸ் (Aeschylus) என்பார் ‘'எல்லா வகை மக்களும் வேறறக் கலந்துவிட்ட ஒரு பெருங்கூட்டம்” (Painminikton hoclon) என அழைக்குமளவு, பாபிலோன் நகரத்து மக்கள் கலந்துவிட்டனர். கி.பி. ஏழாம் நூற்றாண்டு வரை தொடர்ந்து வளம் பெற்றிருந்த தென்னிந்திய வணிகர் கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில், நிப்பூரில் (Nippur) இருந்து முராஷ-வுக்கும், (Murushu), அவர் மகனுக்கும் உரிமையுடையதான பெரிய வர்த்தக நிறுவனத்தின் வணிகத் தொடர்புடைய பட்டயங்களில், வணிகர் தொடர்பான குறிப்புகளைக் காண்கிறோம். (J.R.A.S. 1917, P. 237 Kennedy) கி.மு.538ல் ஸைரஸ் (Cyrus), பாபிலோனியப் பேரரசை அழித்துவிட்டான். அவன் வழிவந்த மதிப்பார்ந்த தாரியஸ் (Dariwas) கி.மு. 20 ஆம் நூற்றாண்டு போலும் காரத்தில் ஸெஸோஸ் - டிரியெஸ் (Sesostrises) என்ற ஒருவனால் முதன் முதலாக வெட்டப்பட்டு, கி.மு. 15 ஆம் நூற்றாண்டில் 18வது அரச மரபினர் ஆட்சியின் கீழ், மீண்டும் திறக்கப்பட்ட சூயஸ் கால்வாயைக் கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் ஒரு பக்தியைத் திறப்பதன் மூலம், கடல், வணிக வளர்ச்சிக்குத் துணை புரிந்தான். அவன், வடமேற்கு இந்தியாவைத் தன் பேரரசோடு இணைத்துக் கொண்டான். அது, இந்துகுஷ் மலையின் குறுக்காகப், பால்க் பகுதிக்கும், அங்கிருந்து எக்ஸைன் (Ewxine) பகுதிக்குச் சென்ற, பாலைவனத்தைக், கூட்டமாகக் கடக்கும் வணிகச் சாத்துமுறை புத்துயிர் பெற வழிவகுத்து